அதிபர் தெரிவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் - போட்டுடைத்த அனுர
நாடாளுமன்றத்தில் அதிபரை தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் தெரிவு பிரதிபலித்தது என, ஒருவர் நம்பினால் அது கட்டுக்கதை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, இன்றைய வாக்கெடுப்பு மக்களின் அபிலாஷைகளின் சிதைந்த பிம்பமாகும் என விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள்
அதிபர் தெரிவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் - போட்டுடைத்த அனுர | President Election Sl Crisis Anura Press
நாடாளுமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட வாக்குகளின் கலவையானது நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறிய அனுரகுமார திஸாநாயக்க, பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் இடையே பாரிய முரண்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, 10 சுயேட்சை அரசியல் குழுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தால். நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும 113 வாக்குகளை விட அதிகமாக பெற்றிருப்பார்.
எனினும் இந்த அரசியல் கட்சிகள் கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டன என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளுக்கு விலை போனார்களா
அதிபர் தெரிவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் - போட்டுடைத்த அனுர | President Election Sl Crisis Anura Press
நாட்டின் தீர்க்கமான தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளுக்காக விலை போயுள்ளதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
புதிய மக்கள் ஆணையை பெறும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்