6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது
முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 19 யுத்தம் முடிந்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி | Commander Ram Released After Completion
இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி ராமை தம்பிலுவில் வைத்து பயங்ரவாத தடுப்பு பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவர் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி | Commander Ram Released After Completion
இதனை தொடர்ந்து அவர் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட 6 வருடகால தண்டனைக்காலம் முடிவுற்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் விடுதலை வழங்கப்பட்டு அவரை விடுதலை செய்துள்ளனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்