அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டக்காரர்களுக்காக இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் பொது பிரதிநிதிகள் கூறுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் எரியும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்காமல் மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - வசந்த முதலிகே | Protest Will Continue Till Ranil Resigns
மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி
இந்த போராட்டத்திற்காக விஹார மகாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.
இப்போது இந்தப் போராட்டத்தை நடத்தும் இடத்தில் மக்களுக்கு எந்த ஒடுக்குமுறையும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வெளியேறும் வரை எமது போராட்டத்தை தொடர்வோம். எங்கள் முடிவு மாறாது. இந்த மோசடி ஆட்சியாளர்கள் வீடு செல்லும் வரை போராட்டத்தை தொடர்வோம்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடியும் எரிவாயு நெருக்கடியும் மோசமடைந்துள்ளன. நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை அடக்க முயற்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்