அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டக்காரர்களுக்காக இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் பொது பிரதிநிதிகள் கூறுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் எரியும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்காமல் மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - வசந்த முதலிகே | Protest Will Continue Till Ranil Resigns
மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி
இந்த போராட்டத்திற்காக விஹார மகாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.
இப்போது இந்தப் போராட்டத்தை நடத்தும் இடத்தில் மக்களுக்கு எந்த ஒடுக்குமுறையும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வெளியேறும் வரை எமது போராட்டத்தை தொடர்வோம். எங்கள் முடிவு மாறாது. இந்த மோசடி ஆட்சியாளர்கள் வீடு செல்லும் வரை போராட்டத்தை தொடர்வோம்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடியும் எரிவாயு நெருக்கடியும் மோசமடைந்துள்ளன. நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை அடக்க முயற்சிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்