முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 145 இலங்கையில் தொடரும் விபத்துக்கள்,

  நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்:சம்பவ இடத்திலேயே தாயும் மகனும் பலி    By Rakesh  40 நிமிடங்கள் முன்             0 SHARES Report விளம்பரம் காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கபராதுவை பிரதேசத்தில் நேற்று (31.08.2023) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வானும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருவர் உயிரிழப்பு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 23 வயதுடைய இளைஞரும், அதில் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த அவருடைய  51 வயது தாயாரும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹயஸ் ரக வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

e 144 இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்

  இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் - காவல்துறையினரை கண்டதும் தப்பியோடிய கும்பல்  (படங்கள்)  By Shadhu Shanker  22 நிமிடங்கள் முன்             0 SHARES விளம்பரம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர்  அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத  நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்துள்ளனர். இதேவேளை நேற்று (31) இரவு, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,குறித்த நபர்கள் இயந்திரங்களை கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அரச காணியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். மேலதிக விசாரணை இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினரை கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு

e 143 அந்தரங்க உறுப்பை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டதாக மனைவி மன்னிப்புக்கோரல்,

  இலங்கையில் 22 கிமீ கர்ப்பிணி மனைவியை சுமந்து சென்ற கணவனை விட்டு வேறுவொரு நபருடன் ஓடிய பெண் !  By Shankar  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள் கர்ப்பிணி மனைவியை சுமந்துகொண்டு கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது. அனால் இப்போது குறித்த மனைவி கணவனையும் குழந்தையும் பிரிந்து வேறுவொருவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவன், குழந்தையை விட்டுவிட்டு இன்னொருவனுடன் ஓடிய மனைவி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் அந்த நேரத்தில் அன்பான கணவனாக இருந்த குமார, வெள்ளத்தின் நடுவே தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவரது முயற்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பலரும் புகழ்ந்தனார். எஸ். எஸ். குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார். உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ

e 142 தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம்

  தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் - ஒப்புக்கொண்ட எம்.பி  By Vanan  11 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனுடனான சந்திப்பில் பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மீளெடுக்கப்பட்டு 14 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பாக தாம் முன்வைத்த கருத்தை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  13 ஆவது திருத்தம் அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

e141யாழில் கொள்ளைகும்பல் அட்டகாசம்

  யாழில் அதிர்ச்சி சம்பவம் :  4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளை கும்பல்!  By Shankar  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் யாழில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட்புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகள், பெரும் தொகை பணம், மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் இன்றையதினம் (29-08-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குழந்தையின் கழுத்தில் கத்திவைத்த கொள்ளையர்கள் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீடொன்றில் கணவன், மனைவி, இரண்டு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து பிறந்து 4 மாதமேயான குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். இதன்போது, வங்கி புத்தகங்கள், 3 பெறுமதியான தொலைபேசிகள், 11 பவுண் நகை, 2, லட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்து பின்னர் பொலிஸாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத

E 140 தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30.08.2023) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது. "எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர். நல்லூர் கந்தனை நேரலையில் தரிசிக்க உலகமக்களுக்கு உன்னதமான தருணம்