இனப்பிரச்னை இல்லையென்று உலக நாடுகளிற்குச் சொன்ன சம்மந்தன் சுமந்திரன் இவர்களின் தலையை வெட்டி ஊர்வலம் கொண்டுபோய் கடலில் எறியுங்கோ,
நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன்
விகாரைகள் மீது கை வைப்பவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்! கடும் எச்சரிக்கை
, நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்." என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே மேர்வின் சில்வா வலம் வருகின்றார்.
ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம்.
ராஜபக்சக்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்கவில்லை. இதனால் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார்.
பின்னர் தனது மகனுடன் இணைந்து மக்கள் சேவை எனும் கட்சியையும் ஆரம்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். பொதுத்தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் களமிறங்கினார். அதன்பின்னர் சுதந்திரக்கட்சி பக்கம் தாவினார். தற்போது எந்த கட்சி என தெளிவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பு விடுத்து நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்தான் இந்த மேர்வின் சில்வா.
இறுதியில் அது மேர்வினின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி மஹிந்த அரசுக்கு அப்போது மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேர்வினின் இந்த உரையை அவரின் கருத்த சுதந்திரம் எனக்கூறி நியாயப்படுத்திவிட முடியாது. இது இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாகவே அமைந்துள்ளது.
எனவே, இந்த உரை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா ஆகியோரின் உரைகள் எவ்வளவு பாரதூரமாக அமைந்ததோ அதற்கு ஒப்பான செயல்தான் இதுவும். எனவே, சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புவோமாக.
(மேர்வினை தாக்குவதோ அல்லது இன குரோதத்தை விதைப்பதோ இப்பதிவின் நோக்கம் அல்ல.மாறாக சட்டம் என்பது எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.)
பிச்சை எடுக்கும் இந்த நாடு கௌரவ பிச்சை எடுக்கணும் எண்டால் உள்நாட்டில் போர் வேண்டும். உலகை ஏமாற்றி பணம் பறிக்க வேண்டும். அவ்வாறான இனவாத ஏற்பாடே இது என முல்லைத்தீவை சேர்ந்த அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் குறித்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்