தமிழர் தாயகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு நாடு - ரகசிய நகர்வு அம்பலம் தமிழர் தாயகத்தில் உள்ள தீவகத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான பாகிஸ்தான் தூதுவரும் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam) தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவிற்கு அருகில் உள்ள குறித்த தீவுப் பகுதிகளில் அதனை எதிரி நாடுகளின ஊடுருவலானது தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் பாரத தேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருக்கின்றார். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)