மகிந்தவின் மடியில் இருந்த கருநாய் கேக்குது தமிழா சௌக்கியமா???
பிரபாகரனோடு நான் இருக்கும் போது, பொன்சேகாவினால் புலிகளை வெற்றி கொள்ள முடியவில்லை! கருணா
மூன்று தசாப்தங்களாக நிலவிய போரை வெற்றி கொண்ட பெருமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சாரும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம், முன்னாள் ஜனாதிபதிக்கே கிடைக்க வேண்டும் என கருணா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் வீரன் தான் என கூறும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு பல வருடங்களுக்கு முன்னர் பொன்சேகா இராணுவத்தில் கடமையாற்றினார். அந்த காலத்திலேயே புலிகளை அழிப்பதற்கு பொன்சேகாவுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய காலப்பகுதியில் தான் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறிய கருணா, அந்த காலப்பகுதியினுள் பொன்சேகாவினால் புலிகளை அழிக்கும் அளவிற்கு எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் யுத்த வெற்றி இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவுக்கு காணப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் அதனை கருத்திற் கொள்ளாமல் தலைமை வழங்கியமையினால் அவரால் யுத்தத்தில் வெற்றிக் கொள்ள முடிந்ததாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கருணா ஊடகங்களின் முன்னிலையில் தோன்றுவது அதிகரித்துள்ளதுடன், மஹிந்தவின் புகழ்பாடும் நபராகவும் அவர் காணப்படுகிறார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
. விடுதலை புலிகள் முதல் முதலாக துரோகிகளை கிளையம் பண்ணுவது தொடர்வாக ஆலோசிப்பதாக முன் நாள் உறிப்பினர் பீற்றர் தெரிவித்துள்ளார் காரணம் அடுத்த தலைமுறைக்கு துரோகிகளின் முகம் தெரியாமல் போகலாம் என்பதற்காகவே இவ் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்