நோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்துப் பெண்
யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்.
அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் தெரிவாகியுள்ளார்.
அவரின் வளர்ச்சியை பாராட்டுவதோடு எதிக்காலத்தில் எமது இன அழிப்பு தொடர்வாக பேசவல்ல அதிகாரியாக அவர் வளர வேண்டும் என்பதே எமது ஆவல்.
கருத்துகள்