பத்தாயிருத்திற்கு மேற்பட்ட தமிழ் இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை செய்து கொலை செய்த சிங்கள வெளியர்களின் நாவகச் சின்னமாக கிரிசாந்தி நினைவு கூறப்படுகின்றார்.
செம்மணி மனிதப் படுகுழி - மாணவி கிரிசாந்தியின் 25ஆவது நினைவுதினம் இன்று....
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 25ஆவது நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய் சகோதரன் மற்றும் உறவினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஆகியோரையும் இராணுவத்தினர் கைது செய்து கொலை செய்தனர்.
இந்தப் படுகொலைச் சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்றது. கிருஷாந்தி, படுகொலை செய்யப்பட்ட இடமான செம்மணியில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வழமையாக இடம்பெறும்.
எனினும் இன்றைய தினம் கொரோனா தனிமைப்படுத்தல் ஊடரடங்கு காரணமாக பொது நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படாத நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது வீட்டில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கருத்துகள்