இறிலங்கா காடையர்கள் அட்டகாசம் யாழில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!! துண்டாடப்பட்ட கை - நால்வர் படுகாயம் யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது நால்வர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18