முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 968

 மேகமும், தண்ணீரும் கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு - நாசா தகவல்






நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கும் 'டிஓஐ 1231 பி' (TOI-1231 b) என்கிற மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. அது நெப்டியூன் கோளின் மறு உருவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கோளில் பூமியைப் போலவே தண்ணீர் மற்றும் மேகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த கோள் ‘ரெட் டுவார்ஃப்’ எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்றும், சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்திற்கு சூரியனைவிட வயது அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதி குளுமையானது என்பதால், இந்த புதிய கோளும் குளுமை நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.


இந்த கோளின் தட்பவெட்பம் அறிய பார்கோட் பயன்படுத்தப்படுகிறது. இந்த கோளில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கோளைக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘டிஓஐ 1231 பி' கோளில் சராசரியாக 140 டிகிரி பாரன்ஹீட் (60 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


மேலும், இது போன்ற அளவிலும், வெப்பநிலையிலும் நமக்குத் தெரிந்த ஒரே ஒரு கோள் இதுதான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


நாசா விஞ்ஞானியான டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில், தென் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த கோளை ஆய்வு செய்து வருகின்றனர். நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் ‘டிஓஐ 1231 பி’ கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அறித்துள்ளனர்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?