முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 993

 கொரோனா கட்டுப்பாடுகளை மீறி குயின்ஸ்லாந்து சென்ற மெல்பன் தம்பதியருக்கு $8000 அபராதம்!



கொரோனா கட்டுப்பாடுகளைமீறி மெல்பனிலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் தலா 4000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மெல்பனில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது குறித்த பெண்ணும் அவரது கணவரும் நியூ சவுத் வேல்ஸ் வழியாக குயின்ஸ்லாந்துக்கு சென்றிருந்தனர்.


குயின்ஸ்லாந்தின் Caloundra பகுதியிலுள்ள குடும்பத்தினருடன் இவர்கள் இருவரும் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.


அத்துடன் குறித்த தம்பதியர் சென்றுவந்த இடங்களின் பட்டியலை வெளியிட்ட குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறையினர் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.



இவர்கள் இருவரும் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலும் சில நாட்களை செலவிட்டிருந்ததால் அங்கும் பல இடங்களுக்கு கோவிட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்தப்பின்னணியில் குறித்த தம்பதியர் பொய்யான தகவல்களை வழங்கி அதன்மூலம் குயின்ஸ்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருந்தமை தெரியவந்ததாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.


இதையடுத்து குறித்த தம்பதியருக்கு சுமார் 8000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மெல்பனிலிருந்து NSW வழியாக குயின்ஸ்லாந்து சென்ற பெண்ணுக்கு கோவிட் தொற்று!

இதுஒருபுறமிருக்க குயின்ஸ்லாந்து Cairns-இல் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பியோட முயற்சித்தார் என்று கூறப்படும் விக்டோரிய நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டிலிருந்து இன்று காலை குயின்ஸ்லாந்து வந்திறங்கிய குறிப்பிட்ட விக்டோரிய நபர், கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.


அங்கிருந்து balcony வழியாக கீழே இறங்கமுயற்சித்தபோது இவர் கீழே விழுந்து காலில் அடிபட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.


Cairns வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நபர் குறித்தும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்திவருவதாக பொலீஸார் தெரிவித்துள்னர்.


தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறிய குறித்த நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?