இலங்கையின் முன்னேற்றத்திற்கு சீனா அவசியம்! அங்கஜன் எம்.பி
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சீனா போன்ற வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்று கடலட்டை பண்ணை அமைத்து கடலட்டை பிடித்து வருகின்றமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அங்கஜன் இராமநாதனிடம் வினவிய போது இதனைக் கூறியுள்ளார்.
கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனம் அனுமதியின்றி கடலட்டை பண்ணை அமைத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். .
அங்கஜன் எதிரிகளோடு சேர்ந்து பணியாற்றினாலும் அவர் தூரநோக்கத்தோடு பார்க்கின்றார். சீனா இலங்கையில் இருக்கும்வரை தான் எமது தமிழீழக் கனவு உயிர்ப்போடு இருக்கும் சீனா வெளியேறி விட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து நாம் ஜம் பதினாயிரம் போராளிகளின் உயிர் அற்பணிப்பின்னூடாக எழுதிய தமிழீழ வரைபடத்தை அழித்து விடுவார்கள் முழுமையாக அழித்து விடுவார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
கருத்துகள்