முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 530 தமிழர்களே உஷார்

தமிழர்களே உஷார் … இலங்கை செல்லும் விமானங்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது: பெரும் பதற்ற நிலை தோன்றவுள்ளது ! இலங்கை விமான நிலையமான கட்ட நாயக்காவில், விமானத்திற்கு நிரப்ப எரி பொருள் இல்லை. இதனால் இலங்கை வரும் விமானங்கள் முழு அளவிலான எரி பொருட்களோடு தான் வர வேண்டும் என்று விமான சேவை திணைக்களம் பல விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் பெரும் ஆபத்து அடங்கி உள்ளதாக, விமானிகள் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக விமானம் ஒன்று தரை இறங்கும் வேளையில் தான் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு விமானம் தரை இறங்கும் வேளையில், அதில் உள்ள பெற்றோல் டேங்கில் மிக குறைவான அளவு பெற்றோல் இருப்பதே நல்லது. அப்படி என்றால் தான் அது தீ பற்றி எரிந்தாலும் இலகுவாக அணைக்க முடியும். ஆனால் பெரும் தொகையான பெற்றோலை, வைத்துக் கொண்டு தரை இறங்குவது என்பது பெரும் ஆபத்தான விடையம் என்று விமானிகள் உடனடியாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து இலங்கை செல்லும் சர்வதேச விமானங்கள் அனைத்தும், கொழும்பில் தரை இறங்கிய பின்னர் இந்தியா ச

c 529 புலம்பெயர் தமிழர்கள்மதில்மேல் பூனையாக பார்வையிடுவதே பொருத்தமாகயிருக்கும்

வட கிழக்கை தமிழர்களின் கையில் கொடுத்து இராணுவம் முழுமையாக வெளியேறினால் ஒரு வருடத்தால் தமிமீழத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் அதைச் செய்தால் சிங்கள இளைஞர் யுவதிகளிற்கு போதிய வேலை வாய்ப்பை எம்மால் கொடுக்க முடியும் அது நடந்தால் 5 வருடத்தால் இலங்கையைப் பார்த்து உலகமே வியக்கும். 30 வருடப்போரில்50,000 ஆயிரம் மாவீரர்களை இளந்து மில்லியன் கணக்கான பணத்தை தமிழீழத்தை மீட்பதற்காக செலவளித்த தமிழர்களிற்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல. என்பதை சிங்கள உயர்மட்ட அடிமட்ட மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா... எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத் தெற்கின் அரசியல்வாதிகள் பலரும் கூறிவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் சாதகமாக சிந்திக்க முடியுமா? நாட்டின் அவசரநிலை கருதி ஏதாவதொருவக

c 528 காடையர்களின் வெறிச்செயலால் கருகிய தமிழர் வரலாறு !!சிங்கள ஆதிக்கத்தின் மற...

தீயில் கருகிய தமிழர் வரலாறு..!! சிங்கள ஆதிக்கத்தின் மற்றுமொரு கோரம் அமைதியாக மனிதன் வாழக்கூடிய ஒரு இடமாகவும் சிங்கப்பூர் வியக்கும் அளவுக்கு இருந்துள்ளது இலங்கை தேசம். அதுவும் தமிழரின் பகுதிகளுக்கு சிறப்பான வரலாறுகள் கொண்டிருந்தது. அந்த வரலாற்றில் பொறாமை கொள்ளப்பட்டு - எரிச்சலடைந்த - சினம் கொண்ட சில கும்பலினால் நாட்டின் நிலைமை புரட்டிப் போடப்பட்டது. யாழ். பொது நூலக எரிப்பு இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில், இலங்கை முழுவதுமான தமிழரின் வரலாறுகளை - சரித்திரங்களை நூல்களாவும் ஆவணங்களாகவும் பொதிந்து வைத்திருந்த யாழ். பொது நூலகத்தில் நடந்தேறிய கொடூரத்தின் உச்சமே பொது நூலக எரிப்பு. யூன் கலவரத்தில் காணாமலாக்கப்பட்ட - சாம்பலாக்கப்பட்ட - அழிக்கப்பட்ட ஒரு வரலாற்றின் படிமம் தான் மீண்டும் நினைவூட்டப்படுகிறது இந்த ஆவணப்படுத்தலின் மூலம். சற்று பொறுமையோடு இந்த வரலாற்றுப் பதிவை செமடுங்கள். இது ஒரு தமிழனின் - தமிழர்களின் உயிர்முடிச்சு..

c 527 மாணவிக்கு பாராட்டு உனது கலை திறமை மேலும் வளர்கே

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் தெரிவாகிய தமிழ் மாணவி! குவியும் வாழ்த்துக்கள் இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். மேலும் இந்த மாணவிக்கும், மாணவியை பயிற்றுவித்த பாடசாலை பயிற்றுவிப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், மாகாண பயிற்றுவிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினருக்கும் முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

''c 526 கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்ல;

இலங்கை பொருளாதார நெருக்கடி: வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பிரதமர் அலுவலகம் இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் இன்று, மே 31 வெளியிட்டது. பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை சொல்வது என்ன? விளம்பரம் அந்த அறிக்கையில், "2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி (PIT) மற்றும் பெருநிறுவன வருமான வரி (CIT) ஆகியவற்றின் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரித் தளங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள் (IT) மற்றும் செயல்படுத்த

c 525 யாருக்காவது அவதானம்

பிரிட்டனில் 70% விகிதத்தால் அதிகரித்துள்ள குரங்கு அம்மை நோய்: யாருக்காவது சொறிந்தால் உடல் உறவில் … பிரித்தானியாவில் கடந்த 3 தினங்களில் 70% விகிதத்தால், குரங்கு அம்மை நோய் அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். யார் என்று சரியாக தெரியாத நபர்களோடு உடல் உறவை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும். தெரிந்த நபர்களாக இருந்தால் கூட, கை கால்களில் அவர்கள் சொறிந்தால், எந்த ஒரு உறவிலும் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த 3 தினங்களில் மட்டும் பிரித்தானியாவில் 179 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி உள்ளது என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளதோடு. மக்கள் எந்த அளவு செக்ஸ்சில் நாட்டமாக உள்ளார்கள் என்பதனையும் இது காட்டுவதாக அமைந்துள்ளது

c 524 அழகிப் போட்டியில் வெற்றி

இலங்கை நடிகை அவுஸ்திரேலியாவில் அழகிப் போட்டியில் வெற்றி இலங்கையின் வளர்ந்து வரும் நடிகையொருவர் அவுஸ்திரேலியாவின் அழகிப் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கை சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிதா பெரேரா எனும் மாடல் அழகியே இவ்வாறு அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் ஸ்பெயினின் சான் ஜோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து கிரீடம் சூட்டவுள்ளார்.

c 523 பிரித்தானியாவில் புதிய விசாத்திட்டம்

பிரித்தானியாவில் புதிய விசாத்திட்டம் - முதற்கட்ட விபரம் வெளியானது.. !! பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வெறும் 715 பவுண்ஸ் கட்டணத்துடன் முதல் மூன்று வருடங்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும். பின்னர் அது நீண்ட கால வேலைவாய்ப்பு அனுமதியாக மாற்றப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் தேவைப்படும் ஆளணியை ஈடுசெய்யும் வகையில், பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு புதிய நுழைவிசைவு திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய விசாத்திட்டம் - முதற்கட்ட விபரம் வெளியானது..!! அத்துடன் பிரித்தானிய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்கு திரும்பாமல் இரண்டு ஆண்டுகள் வரை தங்கி பணிபுரிவதை அனுமதிக்கும் வகையிலான மாற்றங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கபட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற

c 522 பெண்ணைப் பார்த்து சிரித்தாரா?

மட்டக்களப்பில் பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் வீட்டிற்குள் பூகம்பம் மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த விவகாரத்து வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒரு வருடத்தின் முன்னர் திருமணமான ஜோடியொன்றே கடந்த 3 மாதங்களின் முன்னர் விவாகரத்து வழக்கை சந்தித்துள்ளனர். திருமணமாகிய ஆரம்பத்தில் ஒரு சில மாதங்கள் தமது உறவு சுமுகமாக காணப்பட்டதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ள 23 வயதான பெண் குறிப்பிட்டுள்ளார். திருமணத்தின் பின்னர் வெளிநாட்டிலுள்ள பெண்ணின் மாமனாரின் வீட்டில் அவர்கள் குடியிருந்தனர். விற்பனை முகவராக செயற்படும் 27 வயதான கணவரில் ஏற்பட்ட சந்தேகமே விவாகரத்து வழக்கிற்கு காரணமாகியுள்ளது. தாம் குடியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மாடி வீட்டின் மேல் தளத்திற்கு புதிதாக ஒரு தம்பதி வாடகைக்கு குடிவந்ததாகவும், அந்த வீட்டு பெண்ணும், தனது கணவரும் அடிக்கடி பார்த்து சிரித்து கொள்வதுடன்,

c 521 நாட்டை தாருங்கள் எங்களிடம்

மாதம் 2 பில்லியன் டொலர்களை கொண்டு வருகிறோம்: நாட்டை தாருங்கள்! விடுக்கப்பட்ட சவால் தாம் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் வெளிநாட்டு அலுவலகங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை தம்மால் ஒருங்கிணைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாதம் 2 பில்லியன் டொலர்களை கொண்டு வருகிறோம்: நாட்டை தாருங்கள்! விடுக்கப்பட்ட சவால் நெருக்கடியின் உச்சத்தில் சிறிலங்கா நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை துறந்தார். இந்நிலையில், மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவிடம் அரச தலைவர் பிரதமர் பதவி உட்பட நிதி அமைச்சு பொறுப்புக்களையும் ஒப்படைத்திருந்தார். பல நாடுகளுடன் நல் உறவை கொண்டுள்ள ரணில் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பார் என அரசியல்வாதிகள் உட்பட மக்கள் அனைவரும் எதிர்பார்த்தன

c 520 சுயலத்தோடு இனம் சார்ந்து சிந்திப்பது.

தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன்? மோகன் 9 மணி நேரங்களுக்கு முன்னர் "நிவாரண திட்டங்களில் பலன்பெற அவை எளிமையான வகையில் இல்லை," என்று ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்ற கார்த்திக் கூறுகிறார் "நிவாரண திட்டங்களில் பலன்பெற அவை எளிமையான வகையில் இல்லை," என்று ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்ற கார்த்திக் கூறுகிறார் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஐந்து பயனாளிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி தெரியவந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தாக்கல் செய்திருந்த ஆர்.டி.ஐ மனுவிற்கு அம்பேத்கர் ஃபவுண்டேஷன் பதிலளித்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் என்றால் என்ன? இந்திய அரசு கடந்த 1992-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷனை தோற்றுவித்தது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அம்பேத்க

c 519 இந்திய உணவகத்திற்கு முன்பாக கத்திக்குத்து தாக்குதல்

பிரித்தானியாவில் இந்திய உணவகத்திற்கு முன்பாக கத்திக்குத்து தாக்குதல் பிரித்தானியாவில் இந்திய உணவகம் ஒன்றின் முன்பு நடந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை ஓல்ட்ஹாம் நகர மையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இந்திய உணவகத்திற்கு முன்பாக கத்திக்குத்து தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு இதன்போது கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 40 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். இருவருக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாகவே கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இந்திய உணவகத்திற்கு முன்பாக கத்திக்குத்து தாக்குதல் மேலும், சம்பவம் குறித்து பொதுமக்கள் பலரை விசாரித்துள்ளதாகவும், மேலதிக தகவல் தெரியவரும் மக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

c 518 விவத்தில் இளைஞன் பலி

யாழ் சிறுப்பிட்டியில் நிகழ்ந்த அனர்த்தம் - பறிபோனது இளைஞனின் உயிர்(படங்கள்) சிறுப்பிட்டியில் இன்று மாலை நடந்த அனர்த்தம் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நல்லூர் பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரட்ணசீலன் சுஜீவன் (வயது 24) என்பவர் படுகாயமயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வெகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பஸ் தரிப்பு நிலைய சுவருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொ

c 517 ரணில் விக்ரமசிங்க யோசனை

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் விக்ரமசிங்க யோசனை இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம் விளம்பரம் இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை. அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நட

c 516 சிறுமிக்கு நடந்தகொடுமை

சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோயில் பூசகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்குப் பிணை வழங்கியும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை - பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை - சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோயில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர். சிறுமி துஸ்பிரயோகத்திற்குள்ளான விவகாரம்! பூசகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு பின்னர் 2022.05.27 வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் முன்னிறுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோயில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார். பிரதான சந்தேக நபரான பூசாரி பெரியநீலாவணை பகுதியில் உள்ள கோவில் பூஜை

c 515 கொலை செய்தார்களாதிடுக்கிடும் தகவல்?

ரத்தத்தை மாற்றிக் கொடுத்து இந்த 13 வயது சிறுமியைக் கொலை செய்த யாழ் மருத்துவர்கள்: பெரும் நாடகம் அம்பலம் ! இன்றைய தினம்(28) இலங்கை நேரப்படி மதியம் 12 மணிக்கு, நிலாகினி இறந்து விட்டதாக யாழ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 2018ம் ஆண்டு நிலாகினிக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அன்று முதல், ஒரு வருடத்தில் 2 அல்லது 3 முறை அவருக்கு ரத்தம் ஏற்றுவது வழக்கம். மிகவும் துடி துடிப்பாக நல்ல தேக ஆரோக்கியத்தோடு அவர் இருந்து வந்தார். சமீபத்தில் தான் பெரியபிள்ளையாகியும் இருந்தார். கடந்த 23ம் திகதி, ரத்தம் ஏற்ற என, வழமைபோல யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் உடனே, அவருக்கு காச்சல், வாந்தி, மற்றும் வலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை சாதாரண வார்டில் வைத்திருந்த மருத்துவர்கள், பனடோலை கொடுத்துக் கொண்டு 5 மணி நேரம் வைத்திருந்துள்ளார்கள். பின்னரே அவரை ICU வார்டுக்கு மாற்றி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக ரத்தத்தை மாற்றிக் கொடுத்தால் தான், இப்படி எல்லாம் வரும் என்பது மருத்துவர்களுக்கு தெரியாத வ

c 514 தாயக உறவுகள் பார்க்க வேண்டியது

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்! கனடா சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை கனடாவின் சில பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் மூலமாக ஹெப்படைடிஸ் என்னும் நோய் பரவுவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் இந்த நோய் பரவலின் பின்னணியில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஹெப்படைடிஸ் நோய் உருவாகும் முன் பலரும் தாங்கள் இந்த இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள், மார்ச் 5ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் நடுவில் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில், இப்போது அவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்! கனடா சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை குறித்த நாட்களில் அந்த ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை யாராவது வாங்கியிருந

c 513 இலங்கையில் தொடரும் இனப்படுகொலை ?

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி -கோட்டாபய அளித்துள்ள உறுதிமொழி சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்க உறுதியளிப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிள்ளதாவது, சடலமாக மீட்கப்பட்ட சிறுமி -கோட்டாபய அளித்துள்ள உறுதிமொழி ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். கோட்டாபய அளித்த உறுதிமொழி இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன். சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள் என தெரிவித்துள்ளார்.. மாணவியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியி

c 511 நேரடிக்கப்பல்கள்!டெல்லியில் புதிய முடிவுகள்!

காங்கேசன்துறைக்கு இனி நேரடிக் கப்பல்கள் - டெல்லியில் புதிய முடிவு வட பகுதிக்கு தேவையான உதவிகளை கொழும்பு துறைமுகம் ஊடாக நகர்த்தாமல் நேரடியாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்புவதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது. இதன்மூலமான எதிர்வரும் நாட்களில் காங்கேசன்துறை துறைமுகம் பரபரப்பாக மாறக்கூடும். குறிப்பாக வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உர வகைகளை இவ்வாறு வழங்க இந்திய வெளியுறவுத் தலைமை - இலங்கை கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பின் போது முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் விரிவான மற்றும் பல முக்கிய தகவல்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க

c 510 கருணாநிதி சிலை திறப்பு

“எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியது என்ன? "எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இன்று மாலை சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறு இல்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற்றுப்படி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்னால் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுர

c 509 ஷர்வேந்திர சில்வாவின் பதவி பறிக்கப்பட்டத

ஷர்வேந்திர சில்வாவின் பதவி பறிக்கப்பட்டது: ராணுவ கட்டளைத் தளபதியாக வைக்கம் லியனகே நியமிப்பு ! இலங்கையின் ராணுவத் தளபதியாக இருந்து வந்த ஷர்வேந்திர சில்வா, ஜூன் 1ம் திகதி முதல் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று, கோட்டபாய தரப்பு சற்று முன்னர் அறிவித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மேஜ ஜெனரல் வைக்கம் லியனகே ராணுவ தளபதியாக ஜூன் 1ம் திகதி பொறுப்பை ஏற்க்கவுள்ளார். இந்த தடாலடி மாற்றத்திற்கும் உலக வங்கிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் உலக வங்கி சில நிபந்தனைகளை இலங்கை மீது திணித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசு விட்டுக் கொடுத்தபாடாக இல்லை. இன் நிலையில் நேற்றைய தினம்(26) உலக வங்கி இலங்கைக்கு உதவ முடியாது என்று அறிவித்தது. அதனை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இவ்வாறு இருக்க… பதவி பறிக்கப்பட்ட ஷர்வேந்திர சில்வாவுக்கு, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரி என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009ல் நடந்த போரில் பல போர் குற்றங்களை இழைத்தவர் ஷர்வேந்திர சில்வா என்பது ஊர் அறிந்த விடையம். ஆனால் இன்றுவரை கோட்டபாயவால் அவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார

c 508 வர விரும்பவர்கள் சில இடங்களிற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியீடு 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு அவுஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்குஅவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும். இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு அவுஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியீடு இ

c 507 இலங்கைதொடர்வாக இந்தியா ஐப்பான் கூட்டுமுடிவு

இலங்கைக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: இரு பிரபல நாடுகள் அதிரடி முடிவு! இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. டோக்கியோவில் கடந்த செவ்வாய்கிழமை குவாட் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது திறந்த மற்றும் சுதந்திரமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு, தூய வலுசக்தி மற்றும் முதலீடு உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுமாறும், இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மிக மோசமடைந்துவரும் மக்களின் வாழ்க்கைநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் இவ்விடயத்தில் அனைவர

c 506 எவரையும் நம்ப வேண்டாம்

வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது மயக்க மருந்து வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் அவருடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார். உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். திருடப்பட்ட நகைகள் வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கமடைந்தது

c 505 யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - பரிதவிக்கும் பெற்றோர் யாழில் டெங்கு யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி இன்றையதினம் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா என்ற வயது 5 சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.நேற்றுமுன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - பரிதவிக்கும் பெற்றோர் சிறுமி உயிரிழப்பு எனினும், அன்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும், வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்போது குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - பர

c 504 போராட்டம் வலுவிழந்தது ''

இலங்கை பொருளாதார நெருக்கடி: பல நாட்கள் நீடித்த போராட்டம் வலுவிழந்தத ு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போராட்டம் சுமார் 50 நாட்களை கடந்துள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு பாரியளவில் நிலவியது. இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில், அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை அடுத்து, நாடு தழுவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமொன்றை இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்திருந்தனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேதியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து, தமது ஆதரவை வழங்கியிருந்தனர். அன்று முத

c 503 உயிரிழந்த இலங்கை தமிழர்!

ஓடும் ரயிலில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான தகவல் லண்டனில் சுரங்க இரயில் முன்னர் குதித்த இலங்கை தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Isleworth-ஐ சேர்ந்த Shivahar Sirikananathan (41) என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி Turnham Green சுரங்க இரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த இரயில் முன்னர் குதித்தார், இதை பார்த்த அதிர்ச்சியடைந்த இரயில் ஓட்டுனர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் அது முடியாமல் போனது. இந்த சம்பவத்தில் Shivahar உயிரிழந்தார். இது குறித்து பேசிய இரயில் ஓட்டுனர், பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் வேகமாக வந்து அவர் குதித்தார். என்னால் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார். Shivahar தண்டவாளத்தில் குதிக்கும் நேரத்தை பார்த்து கொண்டிருந்தார், அவர் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டார் என நம்புவதாக தெரிவிக்கிறார். Shivahar மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்த நிலையில் பிரேதப் பரிசோதனையில், தசை எலும்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்ப

c 502 அதிபர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் விபத்து சம்பவம் - பாடசாலை அதிபர் பரிதாபமாக உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

c 501 25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா

25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா - உறவுகளிடையே பெரும் சோகம் கனடாவில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் பிரஜையான மொஹமட் மஹாபுஸ் அலாம் என்பரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்திருந்தார். அவரது ஏஅகதிஅந்தஸ்து நிராகரிக்கப்பட்ட போதிலும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டில் அலாமின் மகன் கனடாவில் குடியேறினார். கனடாவில் நாடு கடத்தப்படுபவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கனடாவில் வாழ்ந்த காலத்தில் 300000 டொலர்களுக்கு அலாம் வீடு ஒன்றையும் கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு கடத்தல் நாடு கடத்தப்படுவதனை எதிர்த்து அலாம் பல தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் அந்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கடந்த 17ம் திகதி அலாம் நாடு கடத்தப்படவிருந்த போதிலும், கொவிட் தொற்று காரணமாக அவர் நாடு கடத்தப்படவில்லை. இந்த நிலையில், அலாம் இ