இலங்கை போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் (Video)
இலங்கையின் நடந்த குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான கெய்ர் ஸ்டர்மேர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவுகூருகிறோம். தொழிற்கட்சி தமிழ் மக்களுடன் கை கோர்த்து நிற்கின்றது.
இந்த நாளை நாம் நிதானித்துச் சிந்திக்கும்போது, எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. ஆனால் நாம் இழந்தவர்களை நினைவு கூறும் போது இது உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
13 ஆண்டுகளாகியும் இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இன்று, இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்களுக்கும் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தொழில் கட்சி மீண்டும் உறுதியளிக்கின்றது.
ஐக்கிய இராச்சிய அரசாங்கம்(Uk) தமிழர்களுடன் நிற்க வேண்டும் என்றும், அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC ) ஐ.நா உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு அமைய அனுப்ப வேண்டும்'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்