முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 496 கனடாவிடம் சீறிப் பாய்ந்த ஜி.எல். பீரிஸ்,

மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார். நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார். மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கை! இதற்கு பதிலளிக்கும் விதமாக, செயல் உயர் ஸ்தானிகர் ஸ்ட்ரோஹான், கனடாவின் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் தன்மையைக் குறிப்பிட்டார். இந்தநிலையில் தகுந்த நடவடிக்கைக்காக கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு தாம் அறிவிக்கவும் அவர் இணக்கம் வெளியிட்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?