முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 507 இலங்கைதொடர்வாக இந்தியா ஐப்பான் கூட்டுமுடிவு

இலங்கைக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: இரு பிரபல நாடுகள் அதிரடி முடிவு!
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. டோக்கியோவில் கடந்த செவ்வாய்கிழமை குவாட் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது திறந்த மற்றும் சுதந்திரமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு, தூய வலுசக்தி மற்றும் முதலீடு உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுமாறும், இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மிக மோசமடைந்துவரும் மக்களின் வாழ்க்கைநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக இலங்கைக்கான உதவி வழங்குனர்களிலும், அபிவிருத்திப் பங்காளிகளிலும் ஜப்பான் முதன்மை நாடாக விளங்கி வருகின்றது. எனினும், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் உதவிகள் அதிக கவனம் பெறவில்லை. இதன்படி, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும், ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?