முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 456 தொடரட்டும் முள்ளி வாக்கால் கஞ்சி

இந்தகக்ஞ்சில் தான் மாவீரர்களினதும் அவர்களோடு இறுதி வரை நின்று சாவடைந்த மக்களின் முகம் தெரிவதாக தமிழர்கள் நினைக்கின்றார்கள்.
ஏனெனில் மாவீரர்களின் துயலும் இல்லம் தான் எமது மக்களின் வணக்கத்திற்கு உரிய இடமாக கருதப்படுகின்றது. 30வருடப்போரில் தாய் நாட்டின் விடுதலைக்காக தங்களின் பிள்ளைகளைக்கொடுத்த பெற்றோர்களும் அவர்களின் வாரிசிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள். எனவே அனைத்தும் எதிரிகளால் அளிக்கப்பட்டு அது தடை செய்யப்பட்ட போதிலும். அவர்களிற்கு எஞ்சியது இந்த முள்ளி வாக்கால் கஞ்சி தான்இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் “2009ம் ஆண்டு இந்த மண்ணிலே மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்ச நாளாகிய மே 18 நினைவு நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த வேளை, எமது உயிரோடும் உள்ளத்தோடும் இணைந்துள்ள இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு மிக முக்கியமானது. இந்த கஞ்சியின் பின்னால் இருக்கக்கூடிய உணர்வுகளையும் வலிகளையும் இந்த இடத்தில் பேசுவது மிக முக்கியமானது. 2009ம் ஆண்டு இதே காலப்பகுதியில் எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நாங்கள் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். கையெது மெய்யெது என்று தெரியாத சதை குவியலுக்குள்ளே எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று ஒவ்வொரு பிணங்களாக பிரட்டி பார்த்ததை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம்.
இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் போர் பாதுகாப்பு வலயங்கள் என சொல்லி அங்கு போகவிட்டு பல்குழல் ஏவுகணைகளாலே தாக்கி, எங்களுடைய உடல்களை சிதைத்து, வெறும் பக்கோ இயந்திரங்களால் வெட்டி புதைத்த காலங்களை நினைத்து பார்க்கின்றோம். இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் பாவித்து எங்களுடைய இனத்தை அழிப்பு செய்த நாட்களை நினைத்து பார்க்கின்றோம். அந்த காலக்கட்டத்தில் உணவின்றி கஞ்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அந்த இடத்திலே கஞ்சிக்காக எங்களுடைய பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் செல்களினாலே துவம்சம் செய்யப்பட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றோம். இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் வெறும் தரப்பால் கொட்டில்களாக இருந்த அந்த இடங்களிலே ஒவ்வொரு நாளும் செத்து செத்து மலையாக குவிந்துகொண்டிருந்த பிணங்களினுடைய முகங்களை நாங்கள் நினைத்து பார்க்கின்றோம். எனது அப்பா , கணவன், பிள்ளைகள் என்று சொல்லி ஒவ்வொரு முகங்களையும் புதைத்துவிட்டு வெளியேறிய அந்த கணப்பொழுதுகளை நினைத்துப்பார்க்கின்ற அந்த பொழுதிலேதான் இந்த கஞ்சி எங்களோடு சேர்ந்திருக்கின்றது. இந்த கஞ்சிக்கு பின்னால் எங்களுடைய பசி இருந்திருக்கின்றது, வலி இருந்திருக்கின்றது, போராட்ட உணர்வு இருந்திருக்கின்றது, எங்களுடைய அர்த்தமுள்ள அரசியல் அபிலாசை இருந்திருக்கின்றது. இத்தனையாயிரம் மக்களுடைய விடுதலைக்ககாக அந்த மண்ணிலே தங்களுடைய உயிர்களை ஈர்ந்துபோன நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது எண்ணமும், கனவும் இந்த கஞ்சியிலே இருக்கின்றது. நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த மண்ணிலே வாழ்ந்துகொண்டிருந்தபொழுது, வெறும் 65ஆயிரம் மக்கள்தான் வாழ்கின்றார்கள் என்று சொல்லி பொருளாதார தடையை விதித்து உணவு பஞ்சத்தை ஏற்படுத்தி அந்த மக்களை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த அந்த தருணத்தில் தான் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அந்த கஞ்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி பசியாற்றியிருந்தது. அதன் காரணமாக படுகொலைக்கு உயிர்தப்பிய பலர் பசியிலிருந்து தப்புவதற்கான சூழலை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஏற்படுத்தியிருந்தது. அதனை இன்று நாங்கள் நன்றியோடு நினைவுகூர வேண்டும். ஒரு இனத்தினுடைய விடுதலையிலே, போராட்டத்தின் சக்தியாக இருப்பது பட்டினி கிடத்து இந்த இனத்தின் விடுதலைக்காக உயிரை அர்ப்பணம் செய்வது. அந்த உன்னத தியாகத்தை இந்த மண் செய்திருக்கின்றது. இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் அந்த காலத்திலே கஞ்சிக்காக தாய் நின்றபொழுது, களத்தில் நின்ற பிள்ளை இன்று இல்லை. தங்கள் பிள்ளைகளிற்கு கஞ்சி வாங்கி ஊட்டிவிட வேண்டும் என்பதற்காக அந்த மண்ணிலே மனைவி நின்றபொழுது அந்த கணவர் இன்று இல்லை. அந்த கணவனும் மனைவியும் களத்திலே நின்றபொழுது அந்த கஞ்சிக்காக நின்ற பிள்ளைகள் இன்று இல்லை. அத்தனை துயரத்தை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை இந்த மண்ணிலே அரங்கேற்றி, அதன் உச்சத்தை முள்ளிவாய்க்கால் தொட்டிருக்கின்றது. இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் உலக வரலாற்றில் என்றும் பதிந்திருக்கப்படமுடியாத மிகக் கொடூரமான இனப்படுகொலையை இந்த மண்ணில் நிகழ்த்தியதன் சாட்சியாக எங்களுடைய உணர்வுகளோடு, உள்ளத்தோடு பின்னி நிக்கின்ற ஒரு பொருளாக இந்த கஞ்சி இருக்கின்றது. இந்த கஞ்சி எங்களுடைய எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லப்படும். எங்களுடைய மண்ணிலே மலர்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இந்த கஞ்சியினுடைய உணர்வையும், மகிமையையும் புரிந்துகொண்டு சக்தியுள்ள அரசியல் விடுதலையை பெற்றெடுப்பதற்கான உறுதியை இந்த கஞ்சி அளிக்கும். இந்த கஞ்சியினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வழங்குவதையிட்டு நாங்கள் நிறைவடைகின்றோம்.
இந்த கஞ்சியினுடைய ஒவ்வொரு பருக்களும், ஒவ்வொரு துளியும், வியர்வையையும், இரத்தத்தையும் எங்களுடைய சந்ததியிடம் கடத்திச்செல்லும். இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை” என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?