முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 490 இலங்கை தமிழர்களை இலக்குவைப்பவர்கள்யார் ?

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அரவின் சபேசன்: ஓடும் காரில் இருந்த அரவின்னை சுட்டுக் கொன்றவர்கள் யார் ?
கனடாவின் டியூரஹாம், நகரில் இந்த வருடத்தில் நடக்கும் 6வது கொலை இது. அதுவும் ஒரு ஈழத் தமிழர் இளைஞர் சுடப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வியாழன்(19) அன்று, சாலையில் ஒரு ஹொண்டா காரில் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார் 20 வயது நிரம்பிய அரவின். பிக்கரிங் என்னும் இடத்தில் உள்ள, Taunton Road சாலை வழியாக அவர் சரியாக 11.30 காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென அவரது கார் பாதையை விட்டு விலகி இடிபட்டு நின்றுவிட்டது. முதலில் இதனை அவதானித்த மக்கள், இது ஒரு விபத்து என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள். அங்கே வந்த பொலிசாருக்கு முதலில் புரியவில்லை. பின்னரே அரவின் உடலில் உள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் பற்றி அம்புலன்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே அரவின் காரை ஓட்டிச் செல்லும் வேளையில், எதிர் திசையில், அல்லது அவருக்கு அருகில் வந்து யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக… பொலிசார் நம்புகிறார்கள். இதனால் குறித்த சாலையில்(Taunton Road) காலை 11.30 தொடக்கம் 12.30 வரை பயணித்த எந்த ஒரு வாகனத்திலாவது டாஷ் காம் என்று அழைக்கப்படும் கமரா இருந்ததா ? இருந்தால் உதவி செய்யுங்கள் என்று பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே தமிழர்களே நீங்கள் எதனையாவது பார்த்திருந்தால் உடனே பொலிசாரை தொடர்பு கொள்வது நல்லது. அரவின் சபேசன் ஆத்ம சாந்திக்கு அதிர்வு இணைய வாசகர்களும் பிரார்த்திப்போம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?