முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 209

 கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம்? மக்களிடத்தில் பதற்றம்! கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.   கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்து  பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news 208

 யாழில் கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை! குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.   மேலும் யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது – 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார். அத்தோடு கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய கணவன் தீயை அணைத்து மனைவியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAMIL Eelam news 207

 ஆமிக்காக பலியிடப்படும் இன்னொரு பரம்பரை? இந்த பரம்பரையை தெரிந்துகொள்ள ஒரு நுண்ணரசியல் கூந்தலும் தேவையில்லை? மிக வெளிப்படையாக – சரியாக திட்டமிடப்பட்ட இந்த பலியிடலின் பங்குதாரர்கள் எங்களில் பலர். பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்துக்குள் எப்போதும் நிரவிக்கிடக்கும் காலத்தால் குறைக்கப்படாத அடக்குமுறைத்திமிரை வழிவழியாக கடத்தி – அடுத்தொரு தலைமுறையையும் பலியிட்டவர்கள் எம்மவர்களும் தான். முப்படையினரின் தேவைகளுக்காக : அதாவது வடக்கிலும் கிழக்கிலும் மட்டும் தேவைக்கதிகமாக குவித்துவைக்கப்பட்டிருக்கும் முப்படையினரதும் தேவைகளுக்காக அடாத்தாக பறிக்கப்பட்ட காணிகளை மீளவும் தரச்சொல்லி மக்கள் கேட்கமுடியாத சர்வாதிகாரத்தை மஹிந்த மன்னராட்சிக்காலம் நிகழ்த்தியிருந்தது. படையினர் தமது பயன்பாட்டிலிருக்கும் தமிழர்களின் பூர்வீக காணிகளை விட்டு எழும்பி மக்களை மீளக்குடியேற்றுவது – பயங்கரவாதத்தின் மீளெழுச்சி என்ற தோற்றப்பாடு தென்னிலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த 2010 – 2013 வரையான காலப்பகுதியில், சொந்தநிலத்தை கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்த மக்களின் குரல் வீரியத்தை அடக்க அரசின் தற்காலிக உத்தியாக பயன்பட்டது : தற்காலிக குடியேற்றங்

TAMIL Eelam news 206

 புலிகள் தமக்கான தற்காலிக தலைவரை அறிமுகம் செய்யும் காலம் நெருங்கி வருகின்றது…! புலிகளின் ஆயுத மௌனிப்பை சிலர் புலிகளின் இறுதி முடிவாக நினைப்பது நகைப்பிற்கிடமானது…! “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் என்றுமே மாறவே மாறாது”சொன்னவர் எமது தேசியத் தலைவர் “மேதகு வே.பிரபாகரன் அவர்கள்” அவர் அன்று சொன்ன சொல்லை இன்று சிலர் மறந்திருக்கலாம்’ ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் அவரின் இக்கூற்றை என்றுமே மறக்க மாட்டார்கள். இறுதியாக ஒரு புலி இருக்கும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்று எமது தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி தான் சொல்லிவந்த வார்த்தைக்கு சில விசமிகள் 17-05-2009ல் எமது தலைவர் அவர்களின் உத்தரவிற்கமைவாக மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்டத்தை இறுதிப் புலியின் முடிவாக அர்த்தங்கொள்வது வேடிக்கையானது. உண்மையில் எமது தலைவர் சொன்ன இறுதிப் புலி என்பது அவர் தன்னையோ அன்றி தனது தளபதிகளில் எவரையுமோ அடையாளப்படுத்தி அந்த இறுதிப் புலி இன்னார்தான் என்று எவரிடமும் சொல்லவில்லை’ தலைவரின் கூற்றுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒருவர் தான் போராளியாக இருக்கும்வரையும், அவர் தன

TAMIL Eelam news 205

 விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியவர்கள் மீண்டும் உதவுகிறார்களாம்! இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, நினைவு கூர்ந்தார்.   இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்தி கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இலங்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. இந்நிலையில், இந்த நிகழ்வில் கருத்துக்கூறிய அவர், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளன என்று குறிப்பிட்டார். அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எதிரான போரை வெல்லவும் இலங்கைக்கு இந்தியா இப்போது உதவுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்ய

TAMIL Eelam news 204

 அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்க

TAMIL Eelam news 203

 உள்ளிருந்து ஒரு குரல் மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது. காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும். வலப்புறம் வீதியை விட்டு, வீதியின் இடதுபுறம் ஒரு காப்பரண், அதற்கு இடப்புறமாக இன்னொரு காப்பரண் – இந்தக் காப்பரண் அமைவிடத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தவாறு ஒரு சிறு அணை வடிவிலான உயரமான நிலப்பரப்பு இருந்தது-, அதற்கு இடப்புறம் ஒரு காப்பரண் – இதில் கொம்பனியின் மேலாளர் தமிழ்தென்றல் வானலைக் கருவித் தொகுதியோடும் ஒரு பீ.கே.எல்.எம்.ஜி அணியோடும் ப

TAMIL Eelam news 202

 எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…. .! “நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்” கரும்புலியாக செல்கின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பி வைப்பார். இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல, அந்த மாபெரும் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது. ‘உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்’ என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு. கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம், உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள். கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட

TAMIL Eelam news 201

 ராஜபக்ச சகோதரர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகின்றது; மக்களுக்கு? இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.   நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க சற்று முன்னர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்பொழுது நடைபெறும் கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர். 2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது

TAMIL Eelam news 200

 மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி; மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சி சம்பவம்! மட்டக்களப்பில் குடும்ப வன்முறை காரணமாக பரிதமாக தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு தாளங்குடாவில் 56 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய மகனை எதிர்வரும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏல்.எம். றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். தாளங்குடா 2 ஆம் பிரிவு பெரியதம்பிரான் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் என்பவர் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் நிலத்தில் வீழ்ந்தபோது கல்லில் அடிபட்டு படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இதனையடுத்து சட்டவைத்தியர் பிரோத பரிசோதனையில் வீழ்ந்ததில் அடிபட்ட காயம் அல்ல என சந்தேகம் கொண்டு சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிசாருடன் சட்டவைத்தியர் சென்று பார்வையிட்டு இது கட்டை ஒன்றினால் தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அம்பிலாந்துறையில் திருமணம் முடித்துள்ள 38 வயதுடைய மகனுக

TAMAI Eelam news 199

 “விடுதலை போராளி என்ற தளத்தில் இருந்து உருவான ஒழுக்க சீலன்!” விடுதலை போராளி என்ற தளத்தில் இருந்து ஒரு இனத்திற்காக ஒரு தலைவன் உருவாகின்றபோது அந்த தலைவனை எந்த வல்லாதிக்க சக்திகளாலும் நேர் வழியில் வீழ்த்த முடியாமல் போகின்றமைக்கு காரணம் அந்த தலைவனின் ஒழுக்கம். அவ்வாறு ஒழுக்கமிக்க தலைவன் இந்த உலகில் உண்டென்றால் அது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாக மட்டுமாகத்தான் இருக்க முடியும். அன்று நடந்த ஒரு சுவார்சிய நிகழ்வு பற்றி போர்போம். அன்றைய சமாதன கலகட்டத்தில் (எந்த வருடம் என்பது எனக்கு நினைவில் இல்லை) சர்வதேச ஊடகத்துறையான அல்ஜீரா ஊடகத்தில் இருந்து முதன் முறையாக ஒரு ஊடகவியலாளர் தலைவர் பிரபாகரன் அவர்களை பேட்டி எடுப்பதற்காக கிளிநொச்சி வந்திருந்தார். கிளிநொச்சி வந்திருந்த அந்த ஊடகவியலாளர் மனதில் ஆயுத குழுவின் தலைவன் என்றால் வாயில் புகையிலையுடனும் ஆணவ திமிருடனும் தான் வருவார் அவர் சொல்வதுதான் சரி என்றும் கூறுவார் பேட்டி எடுப்பதற்கு தயாரானார். இதற்கிடையில் ஊடகவியளாலருக்கும் ஒளிப்பட பதிவாளருக்கும் அவர்களின் கலாச்சார முறையிலையே உணவு பரிமாறப்பட்டது இது அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில் வாகனத்தில்

TAMIL Eelam news 198

 தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…! உலகின் பெரும்பாலான இராணுவக் கட்டமைப்பில் இராணுவ மரியாதை (சல்யூட்) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. இன்று பிறந்த குழந்தையும் செய்கின்றனர். ஆனால் சில நாடுகளின் இராணுவம் தமக்கு என்று தனிமையான சிறப்புடன் உருவாக்கி நின்றதையும் சில தேசத்து வரலாறுகள் கூறி நிற்கின்றன. அவ்வகையில் எம் தமிழீழத்தின் மீட்பர்கள், பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ மரியாதையை சற்று வித்தியாசம் தான். போராட்டம் ஆரம்ப காலத்தில் உலக இராணுவங்கள் கடைப்பிடிக்கும் சாயலே கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஆதாரங்களை ஆரம்ப காலத்தில் தேசியத்தலைவர் தமிழீழ காவற்துறை ஆரம்பித்த நிகழ்வில் அணிவகுப்பின் மரியாதையை ஏற்கும் புகைப்படங்கள் கூறிநிற்கின்றன. ஆயினும் நாளடைவில் போராட்டம் உச்சம் பெற்று பரிமாண வளர்ச்சி பெற்ற வேளை தமிழன் தனிச் சிறப்புடன் இந்த வையகம் எங்கும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணச் சிந்தினை கொண்ட எம் தேசியத் தலைவர் சற்று இராணுவ மரியாதையையும். தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிப்போகும் சாயலில் உருவாக்கினார். தமிழரின் பண்பாட்டில் வணக்கம் கூறும்போது இருகை கூப்பி தலையை தாழ்த்த

TAMIL Eelam news 197

 இலங்கை கடற்படையிடம் சிக்கிய மீனவருக்கு நேர்ந்த கொடுமைகள்..! நிர்வாணப்படுத்தி தங்களை சித்ரவதை செய்ததாக இலங்கை இராணுவத்திடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர் ஒருவர் கண்கலங்க தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.   புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் திகதி பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா (30), சாம்சான்டர்வின் (28), நாகராஜ் (52), செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீனவர்களின் படகைத் தாக்கி மூழ்கடித்துள்ளனர். மேலும் படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், கடந்த 20ம் திகதி இருவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும், அடுத்த நாள் மீதி இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் அந்ந

TAMIL Eelam news 196

 4 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த யுவதி-அதிர்ச்சியான பின்னணி! மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் பெண்ணொருவர் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கலாவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரும் அவரது மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். பங்கலாவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார். குறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளதோடு , அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக அந்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் சென்று தொழில் புரிவதற்காக தனது

TAMIL Eelam news 195

 யாழில் துப்பாக்கி முனையில் இளம் பெண்ணிற்கு நடந்த கொடூரம்..! யாழ்ப்பாணம் செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சு. டேனுஜா (வயது 21) என்ற குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரவு எட்டு பேர் கொண்ட கும்பலொன்று தம்மை பொலிஸார் என கூறி,வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்ப பெண்ணை அச்சுறுத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 25 பவுண் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 194

 திருகோணமலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்-பலர் சாட்சி! திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது சகோதரியின் கணவரை கோடரியால் வெட்டிய மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில், மொரவெவ டி-06 பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்றழைக்கப்படும் பரமானந்தன் பிரசாந்த் (36 வயது) என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரவெவ பம்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த கே.சரத்குமார் (40 வயது) என்பவர் கைது செய்தவரின் சகோதரியை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று இவர் வீட்டுக்கு சென்று மைத்துனனுடன் முரண்பாட்டில் ஈடுபட்டநிலையில் கோடரியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் கோடரி வெட்டுக்கு இலக்கான நிலையில் வலது கையில் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை வெட்டிய மைத்துனனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் மகதிவுல

TAMIL Eelam news 193

 தமிழீழம் என்று தனிநாடு கோரிக்கை தற்போது கிடையாது; சும்மி சொல்லுறத எல்லோரும் கேளுங்க! இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை.தமிழ் ஈழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது.இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றது. மேலும் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக ஒருபோதும் வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம். அத்தோடு தனிநாடு கோரும் போது தான் பிரிவினை ஏற்படும்.ஆனால் தற்போது நாங்கள் தனிநாடு கோராமலே எங்களை தனித்தனியாக வைத்து எங்களை பேரினவாதம் எம்மை தாக்குகின்றது.அதற்கு சிறுபான்மை ஆன நாம் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். அத்தோடு மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்ப

TAMIL Eelam news 192

 சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன் முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. தவ

TAMIL Eelam news 191

 கண் இமைக்கும் நொடியில் இலங்கையில் நடந்த பெரும் துயரம்! மொரகொட, மஹதிவுல்வெவ பகுதியில் டிரக்டர் ஒன்றில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த டிரக்டரின் பின்னால் தாயும் குறித்த குழந்தையும் அமர்ந்து சென்றுள்ளதுடன் திடீரென தாயின் கை தவறி குழந்த கீழே விழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது டிரக்டரில் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 மாதம் வயதுடைய நாமல்புர பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் டிரக்டரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

TAMIL Eelam news 190

 அன்புள்ள மகனுக்கு…! எங்களுக்கு எண்டொரு நாடு வேணுமடா தம்பி!… 10.02.1993 அன்புள்ள மகனுக்கு, நீ நலமாயிருப்பாய் என நம்புகிறேன். நானும் இருக்கிறேன். நீ போய் கனகாலமாயிற்று. கப்பல் ஒழுங்காக வராதபடியால் உனது கடிதமும் ஒழுங்காகக் கிடைக்கிறதில்லை. இங்கே சாப்பாட்டுச் சாமான்களும் அப்படித்தான். சுய உற்பத்தி என்று சொல்லி நாங்களும் குரக்கன், மரவள்ளி என்று செய்யிறபடியால் தான் சமாளிக்கிறம். நீ முந்தி ஓடித்திரிந்த வெறும் வளவுக்குள்ளே இப்ப நிறைய சங்கங்கள் வந்திருக்கினம். அவையள் மாதகலிலிருந்தும், தீவிலிருந்தும் அகதியாக வந்தவையள். இந்த மழைக்குள்ளேயும், பனிக்குள்ளேயும் மரங்களுக்கு கீழேயும், சின்னச் சின்ன கொட்டில்களிலேயும், சாக்குகளை மறைப்புக்கு கட்டிக் கொண்டு சரியாக கஸ்ரப்படுதுகள். அரசாங்கம் ஒழுங்காக சாப்பாடு அனுப்பிறதில்லை. நிவாரணம் என்று சொல்லி இன்ஹ்கு குண்டுகள்தான் போடுது. நீ சின்ன வயதில் படித்த பள்ளிக்கூடத்தின் மேலே சுப்பசோனிக் விமானக் குண்டு விழுந்து சரியான சேதம். உன்னப் படிப்பிச்ச செல்லத்துரை மாஸ்ரருக்கு உடம்பெல்லாம் காயம். எங்கட மூத்தண்ணையின் கடைசி மகனும் இன்னும் கொஞ்சப் பொடியளும் அதில் செத்துப்போட்ட

TAMIL Eelam news 189

 மேஜர் துளசி நிறைந்த ஆழுமை… காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா புலிகளோடு போனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. வாய்திறந்து அதிகம் போசாத, ஆரவாரங்களில்லாத ‘றோசாக்கா’வினுள்ளிருந்த நாட்டுப்பற்றை எவராலுமே ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.அவரது நெருங்கிய தோழியின் தங்கையொருவர் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட செய்தி காற்றில் பரவியது. செய்தியை கேள்வியுற்ற குகபாலிகா தோழியிடம் ஓடிவந்து, “எனக்கு ஒரு சொல்லுச் சொல்லியிருந்தா, நானும் சேர்ந்து போயிருப்பன். சொல்லாமல் போய்விட்டாள்” என்று கவலைப்பட்டபோதுதான், அவளுக்குள்ளிருந்த விடுதலை நெருப்பைத் தோழியால் புரிந்துகொள்ள முடிந்தது. நடேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் வரை ஒரு தவணைப் பரீட்சையில் குகபாலிகா முதலாமிடம் வந்தால், தோழி இரண்டாமிடத்தில் இருப்பர். மறு தவணையில் தோழி முதலாமிடத்துக்கு வர, குகபாலிகா இரண்டாமிடத்தில் இருப்பார். இருவருக்குமிடையிவான இடைவெளி ஒன்றோ, இரண்டோ புள்ளி களாகத்தான் இருக்கும். படிப்பில் முதல்தர போட்டியாளராக