முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 169

 சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம். சலுகைகளுக்காக…….. எவரிடமும் நாம் கைநீட்டமாட்டோம். எனது அன்புக்குரிய மக்களே!




இந்த தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கையின் பயனாக எமது பிரச்சினைக்கு ஒரு இறுதியான அரசியற் தீர்வு ஏற்படும் என்பதில் எமக்கு நம்மிக்கை இல்லை. இனவெறி கொண்ட சிங்கள – பௌத்த தலைமைக்கு அப்படி திடீரென மனமாற்றம் ஏற்படுமென நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற தார்மீக சிந்தனைக்குப் பதிலாக, தமிழர்களை மீண்டும் ஏமாற்றி ஆயுதப் புரட்சிப் போராளிகளை அடிபணியச் செய்யவேண்டும் என்பதே அரசின் அந்தரங்கத் திட்டமாகும். 35 வருட அரசியல் வரலாற்றில் மீண்டும் மீண்டும் ஏமாந்துபோன கசப்பான அரசியல் வரலாற்றுப் பாடங்களில் நாம் நிறையக் கற்றுத் தெளிந்திருக்கிறோம். ஆகவே பேச்சுக்கள் என்ற இந்த இராஜதந்திரப் பொறிக்கிடங்கில் நாம் சிக்குப்படப் போவதில்லை என்பதை நான் உறுதியாக திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.


எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை அனுபவித்திருக்கிறோம். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறோம். எமது வீடுகள், சொத்துக்கள், செல்வங்களை இழந்திருக்கின்றோம். பெருந்தொகையான இளம் போராளிகளை களத்தில் பலிகொடுத்திருக்கின்றோம். சகிக்க முடியாத அளவிற்கு நாம் அவமானப் படுத்தப்பட்டிருக்கின்றோம். சிங்களப் பயங்கரவதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.


இத்தனை கொடுமைகளுக்குப் பின்னர், இத்தனை உயிரழிவுகள், பொருளழிவுகளுக்குப் பின்னர், இத்தனை வீரச்சாவுகளுக்குப் பின்னர் நாம் சிங்கள அரசிடம் மண்டியிட்டு சலுகைகளுக்காக கைநீட்டப்போவதில்லை.


தர்மமும், உண்மையும் இறுதியில் வெற்றியளித்து, தமிழ்த் தாயில் கருக்கொண்டுள்ள வரலாற்றுக் குழந்தையான தமிழீழம் என்றோ ஒருநாள் பிரசவமெடுக்கும் என்பது எனது நம்பிக்கை.


எம்மிடம் ஆத்மா பலமும், ஆயுத பலமும் இருக்கிறது. மக்கள் பலமும் எமது கரங்களைப் பலப்படுத்துமானால் எமது இலட்சியம் வெற்றியடைவதை யாராலும், எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றேன்.


_தமிழீழத் தேசியத் தலைவர் _ •மேதகு வே.பிரபாகரன் அவர்கள்•

(1995ம் ஆண்டு மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து ..)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?