முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

E 813 “ TEML சார்வாக அனைத்துத் தமிழ் பேசும் மக்களிற்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 TEML சார்வாக  அனைத்துத் தமிழ் பேசும் மக்களிற்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(வீடியோ இனைப்பு)  By Dilakshan  6 மணி நேரம் முன்             விளம்பரம் மலர்ந்துள்ள புதுவருடம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்து உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கட்டும். துன்பங்கள் எல்லாம் இந்த புத்தாண்டில் மறைந்து போக, நினைத்தது எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.  பலஆண்டுகளாக எமது மூதையர்கள் பிறந்து வழர்ந்த எமது சொந்த மண்ணைபாதுகாப்பதற்காகத்தொடர்ந்து வெளிநாட்டுப்படை எமது நாட்டில் வாழும் தமிழ்ச்சிக்குத்தவறாகப்பிறந்த   சிங்களக்காடையர்கள் என அனைவரோடும். போராடிய மன்னர்களான 01 எல்லாளன், 02 சங்கலியன்03 பண்டாரவன்னியன் இறுதியாக நவின காலத்தில் போராடிய மேதகு பிரபாகரன் அவரோடு தோளோடு  தோள் நின்று போராடி விரச்சாவு அடைந்த மாவீரர்களின் கனவை நனவாகக்க சர்வதேச நாடுகளிடம் நீதிகேட்டுப் போராட உலகில் பரந்து வாழும் தமிழீழ இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு  புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை மலர  அனைத்து தமிழீழ உறவுகளிற்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள். புதிய ஆண்டு அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட

e 812 தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)

  தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)  By Dilakshan  5 மணி நேரம் முன்             விளம்பரம் நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீடு ஒன்றினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம்   முறைப்பாடு இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவசர காவல்துறையினருக்கு பலமுறை அழைப்பு ஏற்படுத்தி அறிவித்தும் அவர்கள் வருகை தரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணை இந்நிலையில் குறித்த நபர் மேலும் தனது மனைவியின் சகோதர

e 811 இன்று முதல் அமுலாகும் புதிய வரியினால் ஏற்றம் கண்டுள்ள பொருட்களின் விலைகள்

  இன்று முதல் அமுலாகும் புதிய வரியினால் ஏற்றம் கண்டுள்ள பொருட்களின் விலைகள்  By Kirushanthi  1 மணி நேரம் முன்             விளம்பரம்   இலங்கையில்  வெட் வரியை அதிகரிப்பதற்காக கடந்த (11.12.2023) ஆம் திகதி கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி,  இன்று முதல் (01.01.2024) முதல் 18% ஆக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வெட் வரி அமுலாகியுள்ளது. எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய VATக்கு உட்பட்டதுடன் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் எம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வெட் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் அதிகரிக்கப்படவுள்ள முச்சக்கரவண்டிகளின் கட்டணம் இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள், சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வெட் வரி விதிக்கப்படுகிறது. இதேவேளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும்

e810 கொழும்பில் பரபரப்பு சம்பவம்: சிறுவர்கள் உட்பட 4 பேர் சடலமாக மீட்பு

கொழும்பில் பரபரப்பு சம்பவம்: சிறுவர்கள் உட்பட 4 பேர் சடலமாக மீட்பு!(கரும்புலிகள்பாடல் இணைப்பு)  By Shankar  55 நிமிடங்கள் முன்             விளம்பரம் கொழும்பு - மாலபே - காஹன்தொட்ட பகுதியில் சிறுவர்கள் உட்பட நால்வர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன்கள் மற்றும் மகள் ஆகியோரே சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 35 வயதான தாய், 09 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு : அதிகாலையில் பெரும் பதற்றம் குறித்த பெண்ணின் கணவர் சில தினங்களுக்கு முன்பு நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும், உயிரிழந்த கணவரின் 7 நாள் கரும காரியம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்

e 809 தென்னிந்திய நடிகர் விஜய் ஜனவரியில் இலங்கை

தென்னிந்திய நடிகர் விஜய் ஜனவரியில் இலங்கை(சீமான்சீமான் வீடியோ இனைப்ப  விஜயம்  By Rakesh  45 நிமிடங்கள் முன்             Report விளம்பரம்  தென்னிந்திய பிரபல நடிகரான  தளபதி விஜய், தனது 68 ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லியோ' படத்தின் வெற்றிக்குப் பின்னர், விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் இந்தப் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. படத்தின் இந்த ஷெட்யூலுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய நடிகர்களை ஒருங்கிணைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படக் குழு தங்கள் குடும்பங்களுடன் புத்தாண்டுக்காக ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'தளபதி 68' படத்தின் அடுத்த ஷெட்யூல் இலங்கையில் இடம்பெறும் எனவும், ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.