அவுஸ்திரேலியா மக்களிற்கான அவசரச் செய்தி?
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.
Source: Getty / Getty Images
இதன்படி ACT பிராந்தியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 22ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 1ம் திகதி இரவு 11.59 மணி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களுக்கு $352 அபராதம் (பள்ளி zoneஇல் $469) மற்றும் 10 demerit points தண்டனை விதிக்கப்படும்.
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் double-demerit points தண்டனை 22ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7 வரை நடைமுறையில் இருக்கும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குறிப்பிட்ட குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவர்கள்- குறிப்பாக ஒரே குற்றத்தை 12 மாதங்களுக்குள் மீண்டும் இழைத்தால் - இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய குற்றத்திற்கு double demerit தண்டனை பெறுவார்கள்.
இது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்கு மட்டுமன்றி ஆண்டின் எந்த நேரத்திற்கும் பொருந்தும்.
குயின்ஸ்லாந்தில் பண்டிகைக் காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
NT, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்