மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
வடக்கு மெக்சிகோவில் மர்மநபர்களால் விருந்து நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது வடக்கு மெக்சிகோவிலுள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பலியானவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு பேரும், காயம் அடைந்தவர்களில் 5 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
பொலிஸ் தேடுதல்
இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பொலிஸார் தேடி வருவதோடு, சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்