முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 633 கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்:

 

கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்: பாடசாலையில் தஞ்சமடைந்த மக்கள்!

கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்: பாடசாலையில் தஞ்சமடைந்த மக்கள்! | Kilinochchi Rain Flood People Sheltered School
 By Shankar 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்ந்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், கண்டாவளை பிரதேசத்தில் 321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 96 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளது.


அவர்களுக்கான சமைத்த உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உப தபாலகம் உள்ளிட்ட பொது மக்கள் சேவை நிலையங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!

நாடு திரும்பினார் மலையக குயில் அசானி!

கிளிநொச்சியில் நிலவிய சீரற்ற வானிலையால் 1,661 குடும்பங்களை சேர்ந்த 5,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்: பாடசாலையில் தஞ்சமடைந்த மக்கள்! | Kilinochchi Rain Flood People Sheltered School

இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு தொடர்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு தொடர்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இதனாடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்: பாடசாலையில் தஞ்சமடைந்த மக்கள்! | Kilinochchi Rain Flood People Sheltered School

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 1,216 குடும்பங்களை சேர்ந்த 3,752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி!

5 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி!

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியை புரட்டிப்போட்ட வெள்ளம்: பாடசாலையில் தஞ்சமடைந்த மக்கள்! | Kilinochchi Rain Flood People Sheltered School

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வங்கப்பட்டுள்ளது.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?