தலைமன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
![தலைமன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of A Family Member In Thalaimannar தலைமன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of A Family Member In Thalaimannar](https://cdn.ibcstack.com/article/071cf3ef-1aaf-47b5-83af-aae5c2465831/23-658d98392bd3b.webp)
By Ashik 5 மணி நேரம் முன்
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்கள் குறித்த நபரை காணாத நிலையில் அவரின் நண்பர் மூலம் இன்று (28.12.2023) சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக பரிசோதனை
இதனையடுத்து உடனடியாக உயிரிழந்தவரின் குடும்பத்தார் உட்பட தலைமன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததையடுத்து சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்