அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர்: பின்னணியில் சர்வதேச வர்த்தகர் (இந்தியவின் விடியோ இணைப்பு)
By Dilakshan 39 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
எதிர்வரும் அதிபர் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அல்லிராஜா செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் பொறுப்பேற்றுள்ள அரசியல் கட்சி "அருணலு மக்கள் கூட்டணி" என்ற பெருந்தோட்ட அரசியல் கட்சியாகும்.
அத்தோடு, குறித்த கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் வைத்தியர். ஏ.ஆர்.கிரிஷான் என்றும் கூறப்படுகிறது.
புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அல்லிராஜா எதிர்வரும் அதிபர் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான அதிபர் வேட்பாளரை முன்வைக்கும் நோக்கில் இக்கட்சியை கையகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாதம் முதல் பரந்துபட்ட ஊடக நடவடிக்கையை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்