முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 626 தலைவர் பிரபாகரனைப் பற்றி அறியப்படாத சில பக்கங்கள்| கே.பியின் தொடர்பாளர் ...


இஸ்ரேலுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கண்டறியப்பட்ட அதி நவீன சுரங்க பாதை(காணொளி)

இஸ்ரேலுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கண்டறியப்பட்ட அதி நவீன சுரங்க பாதை(காணொளி) | Israel Discovered Hamas Largest Tunnel Route

 By Dilakshan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள், காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சுரங்கம், 4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் Erez எல்லை கடப்பு பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சுரங்க பாதையின் கட்டமைப்பினை இஸ்ரேலிய பாதுகாப்பு படை காணொளி ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய பல்கலை மாணவன் லண்டனில் மாயம்

இந்திய பல்கலை மாணவன் லண்டனில் மாயம்


சுரங்கத்தின் அமைப்பு

அதேவேளை, அங்கு தேன்கூடு அமைப்பிலான வலைப்பின்னல் சுரங்கப் பாதைக்குள் மின்சார வசதி, தொடருந்து தண்டவாளங்கள், தொலை தொடர்பு நெட்வொர்க் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், காற்றோட்ட வசதி ஆகியவை வெகு சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், சுரங்கத்தின் சுவர்கள் வலுவான கான்கிரீட் பூசப்பட்டு இருப்பதுடன், அதன் நுழைவு வாயில் 1.5 செ.மீ தடிமன் கொண்ட உலோக உருளை போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள்

அத்துடன், இந்த கட்டமைப்பை வடிவமைப்பதற்கு பல மில்லியன் டொலர் செலவும், பல ஆண்டுகள் கால அளவும் எடுத்து இருக்கும் என்று இஸ்ரேல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த சிக்கலான வலைப்பின்னல் சுரங்கப்பாதையை வடிவமைத்தவர் அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரர் மொஹமட் யஹ்யா என தெரியவந்துள்ளது.

அதேவேளை, சுரங்கத்தில் இருந்து தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?