முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 785 பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது

 

பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது

பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது | An Underworld Criminal Arrested With Weapons
 By Beulah 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

துபாயில் பதுங்கியிருந்த நாட்டின் பிரதான பாதாள உலக தலைவன் என கூறப்படும் ஹினாதயான மகேஷ் நமட்டவின் உத்தரவின் பேரில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர்கள் மூவரைக் கொல்லத் தயாரான பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'மினுவாங்கொட கியா' என அழைக்கப்படும் இந்த குற்றவாளி ஹினாதயான மகேஷின் பிரதான சீடன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

3.8 மி.மீ ரக கைத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்பட்ட 2 தோட்டாக்கள், 9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 06 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரணிலும் பொறுப்புக்கூற வேண்டும் : சரித ஹேரத் வலியுறுத்து

ரணிலும் பொறுப்புக்கூற வேண்டும் : சரித ஹேரத் வலியுறுத்து

விசேட சுற்றிவளைப்பு

நீர்கொழும்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் காமினி ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் மேற்பார்வையில் நீதி நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த பாதாள உலக பலம் கொண்ட நபர் மற்றும் ஆயுதங்கள் கைது செய்யப்பட்டன.

பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது | An Underworld Criminal Arrested With Weapons

பாதாள உலகக் குற்றவாளியிடம் விசாரணை நடத்திய போது, ​​துபாயில் இருக்கும் ஹினாதயான மகேஷின் அறிவுறுத்தலின் பேரில் மினுவாங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் வியாபாரம் செய்து வந்த மெண்டிஸ், சுரங்க மற்றும் மற்றுமொரு நபரை கொலை செய்ய அவர் தயாராக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகொலை திட்டங்களுக்கான காரணங்கள்

கப்பம் செலுத்தாமை மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் பாதாள உலக சண்டைகளே இந்த படுகொலை திட்டங்களுக்கு முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.


இந்த பாதாள உலக குற்றவாளி அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் ஹினாதயான மகேஷின் அறிவுறுத்தலின் பேரில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?