முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 36 யாழில் துயரச்சம்பவம்,

கணவனும் மனைவியும் உறங்கிய அறையில் தீ..! பரிதமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம் உயிரிழப்பு வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர். தம்பதி உறங்கிய அறையில் தீ கணவனும் மனைவியும் உறங்கிய அறையில் தீ..! பரிதமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம் | Both Husband And Wife Were Burnt Dead வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவத

d 35 தங்களின் கலை கலைச்சாரங்களை விதைக்க விரும்பும் வெளிநாட்டவர்கள்,

யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! யாழில் உள்ள பொது நூலக மண்டபத்தில் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு ஒன்று நேற்று (28-09-2022) மாலை இடம்பெற்றது. யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! | Jaffna Different Musical Performance Jazz Music கடந்த செப்டம்பர் 26-ம் திகதியில் நடைபெற்ற ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம் அலையன்ஸ் ஃபிரான்சைஸ், கோதே-இன்ஸ்டிட்யூட் மற்றும் பிரிடிஸ் கவுன்சில் (British council) ஆகியவை இணைந்து இலங்கையின் மூன்று முக்கிய நகரங்களில் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணத்தை நடத்தியிருந்தன. அதன் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இந்த ஜாஸ் இசை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! | Jaffna Different Musical Performance Jazz Music சமாதானமிக்க ஒருங்கிணைந்த சமூகமொன்றை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட இவ் பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு பிரதான, பாப் ராக், ஜாஸ் ஃப்யூஷன், ஜாஸ் ப

d 34 இலங்கையில் போதைக்கு அடுமையாகிய ஆண்கள்?

வீதியில் இழுத்துச் சென்று மனைவியை மோசமாக தாக்கிய கணவன் மனைவியை கொடூரமாக தாக்கும் கணவன் மனைவியை கணவன் வீதியில் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் இழுத்துச் சென்ற மனைவியை பல முறை மின் கம்பத்தில் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டம் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. வீதியில் இழுத்துச் சென்று மனைவியை மோசமாக தாக்கிய கணவன் | A Husband Who Badly Beat His Wife வேடிக்கை பார்த்த மக்கள் தாக்குதல் இடம்பெற்றவேளை பெருமளவிலான மக்கள் சம்பவத்தை வேடிக்கை பாரத்தபோதிலும் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை, காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வீதியில் இழுத்துச் சென்று மனைவியை மோசமாக தாக்கிய கணவன் | A Husband Who Badly Beat His Wife இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

d 33 கொழ்கை மாறாதவர்களை குழப்பும் சதித்திட்டமா?

திலீபன் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம்: ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம் எனவும் எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தவறான செய்தி பிரசுரம் திலீபன் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம்: ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி | Thileepan Memorial Day Sl “பல்வேறு வகையான செய்திகள் திட்டமிட்ட முறையில் அரச சார்பு ஊடகங்களாலும் தமிழ் தேசியத்தை சிதைக்க வேண்டும் என செயற்படும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. தமிழ் தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள். தெரிந்து போகிறார்களா? இல்லை தெரியாமல் போகிறார்களா ? என தெரியவில்லை. எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் த

d 32 வாய்ப் பிரச்சாரம் செய்ய முடியாது வரப்போகின்றது புதிய சட்டம்,

ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கிருலப்பனை - பொல்ஹேன்கொட அலன் மெத்தினியாராம விகாரையின் பிக்குவான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனி ஆள் மனுவொன்றின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒலி மாசு ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Issues Arrest Warrant On Dhammaloka Thera காலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரையிலான காலப்பகுதிக்குள் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியதன் காரணமாக தொந்தரவு ஏற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. எனினும் பிரதிவாதியான உடுவே தம்மாலோக்க தேரர் மன்றில் முன்னிலையாகவில்லை. மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு

d 31 ரணிலின் திட்டமாநடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம்?

அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் பெரும் தொகை பணம் -பேரம்பேசிய அரசாங்கம் தம்முடன் இணைந்து கொண்டால் பெரும் தொகை பணம் வழங்கப்படுமென அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். அவர்களின் மடியில் தான் ஒருபோதும் விழமாட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் | Negotiated Amount For The Actress போராட்டத்தின் இலக்கு ஆனால் நாளைய போராட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றும் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தான் நிற்பேன் என்றார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் | Negotiated Amount For The Actress இதேவேளை அரசாங்கத்திற்கெதிராக ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, அதிபர் செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

d 30 தற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு எப்போது நிரந்தர விசா கிடைக்கும்

? லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படும் என்பதாக அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தமை நாமறிந்த செய்தி. ஆனால் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் கழிகின்ற நிலையில், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பில் அண்மையில் Guardian-க்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர் Andrew Giles, தமது வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அந்த வாக்குறுதியை லேபர் அரசு மறந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் எப்போது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனக் கேட்டதற்கு, கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். Advertisement இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் Andrew Giles தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: கடந்த 10 ஆண்டுகளாக, TPVகள் மற்றும் SHEV களில் இருப்பவர்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்களின் விரக்தியையும் கவலையையும் நான் உண்மையில் உண

d 29 என் இனிய திலீபனே!

என் இனிய திலீபனே! ஐயா தேசத்தின் கவி. புதுவை இரத்தினதுரை. ……………………………… எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை எங்கே என் தம்பி? மெல்ல…மெல்ல அந்த விளக்கணையும் வேளையிலே எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே கல்லான நெஞ்சே….! நீ கண்திறந்து பார்க்கவில்லை நாவரண்டு நாவரண்டு, நாதமணிப் பேச்சிழந்து பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா? காற்றே நீ மூசு, கடலலையே பொங்கி எழு. கூற்றுவனா? அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை என் இனிய திலீபனே! ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை மட்டும்….. பேசிவிடு “தமிழீழம்” என்ற தாரக மந்திரத்தைச் சொல்லிவிட்டு; மீண்டும் தூங்கி விடு மக்கள் சமுத்திரத்தில் மரணித்து விட்ட வீரனே! ஒரு வார்த்தை; ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டுத் தூங்கு…… என்னினிய தோழனே! உனது மரணப்படுக்கை கூட இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது நீ கண்மூடியபடி தூங்குகின்றாய் அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது செத்த பின்னர்! ஊர்கூடித் தேம்புவதுதான் இங்கு வழக

d 28வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர் வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி தன்னை பற்றிய வதந்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது சீன அதிபர் ஜின்பிங் தோன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டுள்ளார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர் | Chinese President Put An End To The Rumours கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக பொது வெளியில் ஜின்பிங் தோன்றி உள்ளதால், சீனாவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக இணையத்தில் வலம் வந்த தகவல்கள் வதந்தி தான் என்பதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. சீனாவில் இராணுவ ஆட்சி பொதுவாக, சீனாவில் பொது நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொண்டாலே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தி கொள்வார் என்றும், உஸ்பெகிஸ்தான் வரை சென்று வந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீன அதிபர் | C

d 27 உணர்வெழுச்சியுடன்குயின்ஸ்லாந்து மாநிலத்தில்தியாகதீபம் வணக்க நிகழ்வு

பிரிஷ்பனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் வணக்க நிகழ்வு நடைபெற்றது அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவுநிகழ்வு, வூட்றிட்ஜ் என்ற இடத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. கிழமை நாட்கள் என்ற போதிலும் தங்களின் வேலைச் சிரமங்களைப் பார்க்காமல் சுமார் 25 தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுவுருவப்படத்திற்கு, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள், கடந்த திங்கட்கிழமை 26/09/2022 அன்று 6.30 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பம் ஆனது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி சிறப்பான முறையில் நடந்த இவ் நிகழ்வில், முதலாவது நிகழ்வான பிரதான பொதுச்சுடரை பிருந்தா சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார், அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு. பவான் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரலியாவின் பழங்குடி மக்களின் தேசியக்கொடியை, திருமதி. ராதிகா மோகன்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு. சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து தாயக விடுதலைப் போரிலே, வீரச்சாவு அடைந்த ம

d 26 எதிரியை வைத்து எதிரியை அழிக்கும் புதிய திட்டத்தை உருவாக்கிய ரணில்,

தாயகம் யாழ்மாட்டத்தில் நல்லூர் விதியிலே நடைபெற்ற தியாககதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை சிங்கள புலநாய்வுக் கட்டமைப்பான ஐனப்போராளிகள் என்ற கட்டமைப்பின் உறுப்பினர்கள், அங்கே சென்று பிரதான பொதுச்சுடரை தட்டிவீழ்த்தி பாரிய குழப்பதை ஏற்படுத்திமையால், பலர் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இருந்தும் பொன் மாஸ்ட்டர் தலைமையில் மீண்டும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது, அதே வேளை அதே சிங்கள அரசாங்கத்தால் புணர்வாழ்வு அளிக்கப்பட சிலவிசமிகள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 6.30 தியாகதீபம் திலீபன் அவர்களின் நிகழ்வு நடப்பதற்கு சில குறிப்பிட் நேரத்திற்கு முன்னர், facebook நேரலைவளியாகத்தோன்றி நிகழ்விற்கு செல்லும் பொது மக்களை குழப்பிய வண்ணம் இருந்தனர், இருந்தும் வழமையாகவரும் தேசிய உணர்வாளர்கள் வந்து சிறப்பான முறையில் தியாகதீபம் அவர்களின் நிகழ்வு நடைபெற்றது,

d 25 தொடரும் சிங்களக்கைக்கூலிகளின் தமிழர்கள் மீதான கொழ்ளை

தமிழர் பகுதியில் வீடுடைத்து பெருந்தொகை நகை திருட்டு (Photos) கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களால் 17 பவுன் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபா பணமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் முதியவர்கள் இருவரையும் கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் எங்கே என விசாரித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். திருட்டு தமிழர் பகுதியில் வீடுடைத்து பெருந்தொகை நகை திருட்டு (Photos) | Kilinochchi Robbery Police Investigation பின்னர் வீட்டுரிமையாளரின் மனைவி அணிந்திருந்த சங்கிலி காப்பு உள்ளிட்ட நகைகளையும். இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும், கொள்ளையிட்டதுடன் வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் போது கைத்தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு வீட்டுரிமையாளரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுவிட்டனர். தாக்குதலுக்குள்ளான வீட்டுரிமையாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற

d 24 புலிகளின் அளிவிற்குப்பின்னர் தமிழர்களின் ஒட்டுமொத்த ஈழநாட்டை தங்களின் நாடு என உருமை கோரும் சிங்கள வெறியர்கள்,

தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் ; கொந்தளிக்கும் சரத் வீரசேகர (Video ) இது மிக மோசமான துஷ்ட செயல் எனவும் தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போதே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடு என தெரிவித்த அவர், குருந்தூர் மலை 2000 ஆம் ஆண்டுகள் பழமையானது எனவும் குறிப்பிட்டார். அத்தோடு குருந்தூர் விகாரையில் புனித தாதுவை பிரதிக்ஷ்டை செய்ய இடமளிக்காதது குறித்து முழு தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

d 23 யாழில் இப்படியும் ஒரு சம்பவம்

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது மதுவுக்கு பதில் ஓடிக்கொலோன் யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார். யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது | The One Who Drank Odicolone Was Death இலங்கையில் பொருளாதார நெருக்கடி இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி மதுபான வகைகளின் விலைகளும அதிகரித்துள்ளன.இதனால் மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் இவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதில

d 22 இப்படியும் ஒரு பெண் இலங்கையில் இருந்துள்ளார், ஆனால் முள்ளிவாய்க்காலை நினைத்தால் எமக்கு கவலைதான்,

நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாம் செய்த பெண் பொலநறுவை பிரதேசத்தில் நாய் ஒன்றின் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த இரேஷா பிரசாங்கனி என்ற 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழப்பு நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாம் செய்த பெண் | The Woman Who Sacrificed Her Life To Save The Dog கடந்த 17ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கதுருவெலயில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளார். அயல் வீட்டவரின் வளர்ப்பு நாய் வீட்டின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுவதைக் கண்ட பெண், அப்போது ரயில் சத்தம் கேட்டு ரயில் பாதைக்கு ஓடி நாயைக் காப்பாற்றியது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை பொது வைத்தி

d 21 குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி "இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி | Everyone Has Equal Rights As Citizens Of Sri Lanka குருந்தூர் மலை விவகாரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் "இனவாத, மதவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவோர் நாட்டின் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களுக்குரிய முழுமையான உரிமைகளைக் கோரி நிற்பார்கள்

d 20 அவுஸ்திரேலியாவில் மனோ கணேசன், சிங்களவர்கள் மத்தியில் உரையாற்ரினார்.

இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி சிங்கள - பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டரீதியாக மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மெல்பேர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், அவுஸ்திரலியாவின் பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும் இணைந்திருந்த போதிலும் பெரும்பாலும் சிங்கள மக்களின் போராட்டமாகவே அவை முன்னெடுக்கப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார். இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள மக்களுக்கான பாரிய பொறுப்பு இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Coun

d19 இலங்கையில் குழந்தைகளை பெற்று நோட்டில் எறியும் பெண்கள்,

பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது பிறந்த குழந்தையை பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் குளத்திற்கு அருகில் மைதானத்தில் கைவிட்டுச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் குழந்தையை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது | Woman Arrested For Abandoning Newborn Baby பெண்ணொருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது குழந்தையின் அழு சத்தம் கேட்டுள்ளது. அப்போது தேடிப்பார்த்ததில் உர பைக்குள் போடப்பட்டிருந்த குழந்தையை அந்த பெண் மீட்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து பொலிஸாருக்கு அறிவித்து அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

d 18 பிரான்ஸில்குழு மோதல் தமிழ் இளைஞன் பலி

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris இந்தத் தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris இந்த கொலைச்சம்பவம் பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பாரிஸ் குற்றவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 17 ஈரானில்மக்கள் போராட்டம்,

நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடங்குவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர் நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு | 50 Killed Anti Hijab Protests Intensify Iran போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் கறுப்பு உடை அணிந்து தெஹ்ரான் வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் காரணமாக பதற்ற நிலை அதிக

d 16 யாரும் எங்கே சென்றாலும் பிரச்சனையில்லை தமிழீழக்கொழ்கை மாறாமல் இருந்தால் காணும்

தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.விவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் | Shanakyan Tamil Party Leaders National Assembly பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினம் களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். பயங்கரவாத தடை சட்டம் தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் | Shanakyan Tamil Part

d 15 புலம்பெயர் தமிழர்கள் எக்காரணம் கொண்டும் இலங்கை செல்ல வேண்டாம் இந்நிலை உங்களிற்கும் வரலாம்?

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை! யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21-09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழர்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல் உறுப்புக்கள் உயர்ந்த விலையில் வெளிநாடுகளிற்கு விக்கப்படுவதை பல முறை தெரிவித்துள்ளேன், அவதானமாகயிருக்கவும்,

d 14 ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மாபெரும் துரோகி என தமிழர்களால் கருதப்படும் கருணா மீண்டும் திரு வெளியில் .

நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல் நீண்ட காலமாக பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகமூர்த்தி -முரளிதரன்(கருணா) தற்போது பொதுவெளியில் வந்து கோட்டாபயவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். எவரது ஆலோசனையையும் கேட்காமல் அவர் எடுத்த முடிவால் நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளதாகவும் நாடு தற்போது எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி சுமுக நிலைக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகளாவது செல்லுமெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல் | Karuna Appeared In Public After A Long Time புதிய இளைஞர் அணி கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கிச் சென்று நாடாளுமன்றத்தில் அமர்த்த வேண்டும். நடக்க முடியாத நிலையில் நாடாளுமன்றம் சென

d 13 சிங்கள மற்றும் இந்தியா அரசோடு நெருங்கிய உறவில் இருந்த அதிபர் கைது .

சீன அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டாரா - வெளியானது உண்மை நிலைவரம் சதிப்புரட்சி மூலம் சீன அதிபர் கைது சதிப்புரட்சி மூலம் சீன அதிபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் நம்பத்தகாத செய்தி நிறுவனங்களால் இட்டுக்கட்டப்பட்டது என்றும் சீனத் தூதரகம், தெரிவித்துள்ளது. வடக்கு எல்லையில் சீன மற்றும் இந்திய படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் திகதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலியான செய்தி எனினும் அதிபர் ஜி ஜின்பிங் தனது மத்திய ஆசிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாகவும்,

d 12 ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் ஹங்கேரி எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களை ஏற்றச்சென்ற மூன்று லொறிகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இருந்து 35 பேர் கைதுசெய்யப்பட்டனர். துருக்கியர்கள் கைது அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது லொறியில் மறைந்திருந்த நிலையில் 20 துருக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது லொறி வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த நிலையில் அதில் இருந்து 15 பங்களாதேஸ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டனர். ருமேனியா எல்லைப்படையினர், மோப்ப நாய்களின் உதவியுடனேயே எல்லைக்கடந்து சென்ற இலங்கையர்களையும் ஏனையோரையும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

d 11 இனங்களிற்கு இடைய முறுகலை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகள்,

வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (22-09-2022) பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு கூடி நின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது தொலைபேசியையும் பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம

d 10 இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்!

சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை விசாரணை இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டூழியங்களில் ஈடுபட்ட இந்திய இராணுவம் சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை | Indian Army Sri Lanka Should Investigate Ohchr இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப

d 9ஆரம்பத்தில் இந்த விடயத்தை தட்டிக்களித்து விட்டு ஒற்றை ஆட்சிக்கு தலையாட்டிய கூட்டம்,

தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளே முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள், மனித உரிமைப் பேரவை பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில், 22 செப்டம்பர் 2011 புதன்கிழமை அன்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தர்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ந. சிறீகாந்தா ஆகியோர் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவை வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தமிழர் தரப்பின் கோரிக்கை உதாசீனம் தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் | Un Sri Lanka Issue Icc Letter Tamil Leaders குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம் தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி