சிட்னி தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் மரணம்!
சிட்னியின் தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மரணமடைந்த அனைவரும் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், சிட்னியில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் உள்ள Macarthur பிராந்திய கிராமமான Buxton அருகே Orange Road மற்றும் East Parade intersection-இல் Nissan ute ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்ததாக பொலீசார் கூறுகின்றனர்.
வாகனத்தின் ஓட்டுநர் மாத்திரம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த வாகனத்தில் 18 வயது ஓட்டுநர், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் பயணம்செய்திருந்ததாகவும், மரணமடைந்தவர்கள் முறைப்படி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
14 -16 வயதுகளிலுள்ள இந்த 5 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், இவர்கள் Picton High பள்ளி மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்