முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 7 குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சல

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos)
விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(22.09.2022) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. நினைவஞ்சலி நிகழ்வு 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர். அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கத்தின் கருத்து விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing இதேவேளை நாகர்கோவில் பாடசாலை அருகாமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் எம்.கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதன்போது எம்.கே சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும். மீண்டும் இனப்படுகொலைகள் இடம்பெறாதிருக்கக்கூடிய பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை பாவித்து, தமிழ்தேசிய இனம் தமது சுய நிர்ணய உரிமையைப் பாவிக்கக் கூடியதாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமா? சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing நாகர்கோவில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களுக்குமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?