தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது
தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர்
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை அடுத்து இந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பிரகாரம் கல்தோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு வயது 32.
தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது | Constable Arrested For Breaking Gold Necklaces
இந்த காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளும் மீட்பு
138,000 ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 19ஆம் திகதி பனமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, ஓகஸ்ட் 24ஆம் திகதி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கட்டுவன காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு இலட்சம் பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் செப்ரெம்பர் 08 ஆம் திகதி பனாமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது | Constable Arrested For Breaking Gold Necklaces
இந்த கொள்ளைகள் அனைத்தையும் குறித்த காவல்துறை உத்தியோகத்தரே செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்