முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 1000 தென்னிலங்கையில் தொடரும் மனித முறன்பாடு கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் அரசபடை,

வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர்
இலங்கையின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற அதேவேளை, பொருளாதார நெருக்கடியானது அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவர், கடத்தல் முயற்சி ஒன்றை தடுக்க முயன்றதால் கொடூரமாக கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில், தனது வீட்டு வாசலில் அபகரிப்பு முயற்சியை முறியடிக்க முயன்ற வினோத் உயிரிழந்தார். அவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவரது மனைவி வீட்டிற்கு அருகில் வந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரஷிகவின் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றனர். வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர் | Man Stabbed To Death While Mugging Attempt மனைவியின் வருகைக்காக காத்திருந்த வினோத் இதன்போது, ரஷிக தனது தந்தையுடன் தனது மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திருந்தார். மனைவியின் கைப்பையை பறித்த அடுத்து வினாடியில், ரஷிகவும் தந்தையும் மோட்டார் சைக்கிள் திருடர்களை தாக்கினர். அப்போது ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ரஷிகவை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ரசிகவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரை காப்பாற்றமுடியவில்லை. சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றது. இதேவேளை இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கைப்பைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?