முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 941 வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக

வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார். ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட – பிரிவென கல்வி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர் சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின