முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 29 என் இனிய திலீபனே!

என் இனிய திலீபனே!
ஐயா தேசத்தின் கவி. புதுவை இரத்தினதுரை. ……………………………… எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை எங்கே என் தம்பி? மெல்ல…மெல்ல அந்த விளக்கணையும் வேளையிலே எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே கல்லான நெஞ்சே….! நீ கண்திறந்து பார்க்கவில்லை நாவரண்டு நாவரண்டு, நாதமணிப் பேச்சிழந்து பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா? காற்றே நீ மூசு, கடலலையே பொங்கி எழு. கூற்றுவனா? அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை என் இனிய திலீபனே! ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை மட்டும்….. பேசிவிடு “தமிழீழம்” என்ற தாரக மந்திரத்தைச் சொல்லிவிட்டு; மீண்டும் தூங்கி விடு மக்கள் சமுத்திரத்தில் மரணித்து விட்ட வீரனே! ஒரு வார்த்தை; ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டுத் தூங்கு…… என்னினிய தோழனே! உனது மரணப்படுக்கை கூட இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது நீ கண்மூடியபடி தூங்குகின்றாய் அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது செத்த பின்னர்! ஊர்கூடித் தேம்புவதுதான் இங்கு வழக்கம். ஆனால்…. ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது மரணித்த வரலாறு உன்னுடன்தான் ஆரம்பமாகிறது சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து தோல்வி கண்டது இப்போது சாவை நீயாகச் சந்திக்கச்சென்று வெற்றிகண்டு விட்டாய் என் இனிய திலீபனே! நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும் உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன். நீ….நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும் அருகிலி பார்த்துள்ளேன் எந்த வித்தியாசமும் தெரியவில்லை போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது இந்திய அரசே! இது உனக்குப் புரிகிறதா? தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான் எங்களை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான். எங்கள் மண்ணின் இறைமையைத் தா என்றான் இது குற்றமா? இதற்காகத்தானே போராடினான் இதற்காகத்தானே போராடினான் இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்…… உன் பதிலை நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம் தாமதித்துவிட்டாய் நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும் இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய் திலீபன் என்ற புயல் உன்னைச் சும்மா விடாது உசுப்பியே தீரும் எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே! இருந்தவனைக் காணவில்லை. என்இனிய திலீபனே! நிம்மதியாய்த் தூங்கு நிலம் வெடிக்கப் போகிறது நிம்மதியாய்த் தூங்கு நிலம் வெடிக்கப்போகிறது. காற்றே நீ முக கடலலையே பொங்கி எழு கூற்றுவனா? அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,