முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 949 தமிழர்களின் கட்டுக்கோப்பு காத்தில் பறந்தன,

யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை!
யாழில் கடந்த சில நாட்களுக்கு முதல் திருமணம் முடித்து மணமகள் வீட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் புது மாப்பிளை இன்னொரு யுவதியுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த பிரான்சில் வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்த 34 வயதான நபர் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் முடித்திருந்தார். யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy திருமணம் முடித்து ஒரு கிழமைக்குள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி யாழில் உள்ள பிரபல விடுதியில் அறை ஒன்றை ஒழுங்கு செய்திருந்த நிலையில் பார்ட்டிக்கு தானும் வருவதாக மனைவி கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் மட்டும் விடுதிக்கு சென்றுள்ளார். விடுதிக்கு சென்ற மனைவி இதே வேளை மாப்பிளைக்கு பெரிய அளவில் நண்பர்கள் இல்லை என மாப்பிளையின் தாயார் கூறியதால் சந்தேகமடைந்த மனைவி தனது தம்பியையும் அழைத்துக் கொண்டு விடுதிக்கு இரவு 8 மணியளவில் சென்று விசாரித்துள்ளார், அதன் போது மாப்பிளையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட விடுதி அறைக்கு மனைவியும் தம்பியும் செல்ல முற்பட்ட போது விடுதி வரவேற்பாளர்கள் அனுமதிக்கவில்லை. யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy அதே நேரம் மாப்பிளைக்கு உள்ளகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவி வந்திருப்பதை கூறியுள்ளார்கள். இதனால் சந்தேகமடைந்த மனைவியும் மனைவியின் தம்பியாரும் விடுதி ஊழியர்கள் மறிக்க மறிக்க மாப்பிளையின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மாப்பிளை இன்னொரு யுவதியுடன் தங்கியிருந்ததை கண்டு பிடித்து கடும் வாக்குவாததில் ஈடுபட்ட மனைவி அறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது. நையப்புடைத்த உறவினர்கள் இதனையடுத்து அங்கு விரைந்த மனைவியின் உறவினர்களும் அங்கு வந்து மாப்பிளையுடன் தங்கியிருந்த பெண்ணையும் நையப்புடைத்துள்ளனர். இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விடுதி பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை வெளியேற்ற பெரும் சிக்கல் பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் விடுதி ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார். யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. இச் சம்பவத்தால் விடுதியில் தங்கியிருந்த ஏனைய சுற்றுலா பிரயாணிகளும் அதிர்ச்சியடைந்ததாக தெரியவருகின்றது. அதேவேளை கடந்த சில நாட்களின் முன் இன்னொரு சுற்றுலாப்பிரயாணியானியின் திருவிளையாடலால் விடுதி அறை தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின