ஐ.நாவிலிருந்து அவசர செய்தி!! ஒரு குடும்பத்தின் வாக்குமூலம்!!கண்திறக்குமா சர்வதேசம் - (காணொலி)
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப் பெயர்வினை பார்த்து கண்கலங்கிய மகன் தமிழருக்கு என ஒரு விடிவு வேண்டும் என தனது பல்கலைக்கழக அனுமதியையும் உதறி தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தார்.
இறுதி யுத்தம் முடிந்து ஓமந்தை ஊடாக வரும்போது அவரது பெயரை சொல்லி விசாரணைக்கு அழைத்து சென்றவர்தான் இன்றுவரை எங்கு என்று தெரியாமல் தேடுகின்றோம் என கூறுகிறார் தாயார்.
அவர் தொடர்பாக தாயார் தெரிவிக்கும் விடயங்கள் காணொலி வடிவில்
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்