இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி
சிங்கள - பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டரீதியாக மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
மெல்பேர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், அவுஸ்திரலியாவின் பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும் இணைந்திருந்த போதிலும் பெரும்பாலும் சிங்கள மக்களின் போராட்டமாகவே அவை முன்னெடுக்கப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள மக்களுக்கான பாரிய பொறுப்பு
இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Country Sri Lanka Legally Change
அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போதே உலகம் முழுவதும் பெருவாரியான சிங்கள மக்களும் வாழ்கிறார்கள் என்பதை பலர் அறிந்து கொண்டார்கள் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு இன்று பாரிய பொறுப்பொன்று உள்ளது என கூறியுள்ள அவர், அவுஸ்திரேலிய அரசாங்கமே முன்வந்து, சிங்கள மொழி கலாசாரம் உட்பட சுமார் 68 மொழி கலாசாரங்களை வளர்த்து விடுகிறது என சுட்டிக்காட்டினார்.
அவுஸ்திரேலியாவில் பன்மொழி, பல்லின, பன்மத கலாசாரம் ஒரு சுமையாக கருதப்படாமல், சாதகமாக கொண்டாடப்படுவதுடன், அது அரசாங்க கொள்கையாகவே முன்னெடுக்கப்படுகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள தலைவர்களுக்கு எடுத்துச் செல்லுதல்
இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Country Sri Lanka Legally Change
இந்த பன்மைத்துவ செய்தியை இலங்கையின் சிங்கள தலைவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள் எனவும் அது உங்கள் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து இலங்கை, ஒரு பன்மைத்துவ நாடு என்ற நிலைமைக்கு சட்டரீதியாக மாற வேண்டும் எனவும் இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக உதவுங்கள் எனவும் மனோ கணேசன் சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறும் போதே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சியை பெற முடியும் எனவும் இதுபற்றிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் சிங்கள இலங்கையர்களிடம் இருக்கிறது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்