முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 969 நிறையசாப்பிட்டு உடும்பு வைப்பவர்களிற்கு சிறந்த ஆலோசனை,

10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கமுடியும்! இதை மட்டும் செய்யுங்கள்
மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை செய்கிறார்கள். உயர்பயிற்சியின் சென்று உடல் வியர்வை சிந்தி எடையை குறைக்க முயல்கிறார்கள். இவற்றால். விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கமுடியும்! இதை மட்டும் செய்யுங்கள் | Weight Lose Tips Follow This Food Chart Healthy இருப்பினும், உடல் எடையை குறைக்க மிக எளிய வழியும் உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க இந்த முறைகளை கடைபிடிக்கவும் அதிகாலை : காலையில் சுமார் 5 மணிக்கு எழுந்து கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். தினமும் சுமார் 3-5 கிமீ நடக்கவும். இது உங்கள் உடலை வியர்க்க வைக்கும். பின்னர் வீட்டிற்கு வந்து காலை சிற்றுண்டியில் ஓட் மீல், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். இவை குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதனால் உங்கள் வயிறு நிரம்பும், உங்கள் தொப்பையும் குறையும். 10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கமுடியும்! இதை மட்டும் செய்யுங்கள் | Weight Lose Tips Follow This Food Chart Healthy
மதிய உணவு : மதிய உணவில் ஒரு அரசனைப் போல உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த கூற்று பொருந்தாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதியம் 2 சப்பாத்தி, சிறிது சாதம், புரதம் நிறைந்த பருப்பு மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு, கண்டிப்பாக மோர் அல்லது லஸ்ஸி அருந்தவும். இந்த வழிகளில் உடலுக்கு அதிக புரதம் கிடைக்கும். 10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கமுடியும்! இதை மட்டும் செய்யுங்கள் | Weight Lose Tips Follow This Food Chart Healthy இரவில் இவற்றை சாப்பிடலாம் : இரவு உணவு எப்போதும் மிகவும் முக்கியமான உணவாகும். இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு உணவில் எப்போதும் லேசான உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் சரியான நேரத்தில் தூக்கம் வரும். உங்கள் இரவு உணவில் காய்கறிகளின் சாலட், பழங்களை உட்கொள்ளலாம். இரவில் உட்கொள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஏற்றது. அதில் கலோரிகள் குறைவாக உள்ளன. 10 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கமுடியும்! இதை மட்டும் செய்யுங்கள் | Weight Lose Tips Follow This Food Chart Healthy மேலும் அதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இது ஜீரணிக்க எளிதானது மற்றும் கொழுப்பைக் குறைக்கும். இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுகளின் மூலம் நாம் நமது உடல் எடையை எளிதாக குறைக்கலாம். எந்த நேரத்தில், எந்த உணவை எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிவது மிக முக்கியமாகும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.