முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 958 ஐ.நா வில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட இலங்கை

ஐ.நா வில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட இலங்கை
பின் தள்ளப்பட்ட இலங்கை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் ​பேச்சாளர்களின் வரிசையில் இலங்கை பின்வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் மட்ட அமர்வில் 92 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 56 அரசாங்க தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். எனினும் இலங்கை அதில் உள்ளடங்கவில்லை. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பேச்சாளர்களின் அசல் பட்டியலில், செப்டம்பர் 21 அன்று இலங்கைக்கு ஒரு முதன்மையான பேச்சுக்கான இடம் தரப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வு எச்எஸ் என்ற ஹெட் ஒப் ஸ்டேட் (அரச தலைவருக்கான) உரை அப்போது இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஐ.நா வில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட இலங்கை | Sri Lanka Pushed To The Back Row In The Un பேச்சாளர்களின் அசல் பட்டியல் எனினும் கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட பேச்சாளர் பட்டியலின்படி இலங்கைக்கான உரை செப்டம்பர் 24ஆம் திகதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பொதுச்சபை அமர்வில் இலங்கையின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியே கலந்துகொள்கிறார். எனவே எச்எஸ் (அரச தலைவர்), எச்ஜி (அரசாங்கத்தலைவர்) என்ற வகுதியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை எம்( அமைச்சர்) என்ற வகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐ.நா வில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட இலங்கை | Sri Lanka Pushed To The Back Row In The Un இதேவேளை, இந்த தடவை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீனாவின் அதிபர் ஜி.ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் மியன்மார் இராணுவ தலைமையாளர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?