யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்! கமராவில் சிக்கிய காட்சி
யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது.
துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.
யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்! கமராவில் சிக்கிய காட்சி | Daylight Banana Plant Theft In Jaffna Kondavil
இந்த பிரதேசத்தில் வாழைக்குலை மற்றும் தேங்காய் திருட்டு அடிக்கடி இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்