முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 331 நீங்கள் நீரிழிவு நோயாளியா?

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம். சில காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்தல் நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் | Diabetic Patients Drink And Avoid Health Tips நீரிழிவு நோயில் உணவு முறை, உடற்பயிற்சி, நோயின் தீவிரத்தை அறித்துக் கொள்ளல், இன்சுலின் பயன்படுத்தல் போன்றவற்றை முறையே செய்தல் வேண்டும். கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இனிப்புப்பான பதார்த்தங்களை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும். நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் | Diabetic Patients Drink And Avoid Health Tips பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும். கொழுப்பு

d 330 சீனாவிலிருந்து வருபவர்களை அவதானித்து வரும்ஆஸ்திரேலியா

சீனாவிலிருந்து வருபவர்களுக்கான கோவிட் விதிகள்: நிலைமையை அவதானித்து வரும் ஆஸ்திரேலியா NSW மற்றும் விக்டோரியாவில் புதிய கோவிட் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன சீனாவிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியா கண்காணிக்கும், ஆனால் இந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை NYEக்கான கோவிட்-பாதுகாப்பு திட்டத்தை கொண்டிருக்குமாறு அதிகாரியகள் ஊக்குவிக்கின்றனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இந்த வாரம் 27,665 புதிய கோவிட் தொற்றுகளுடன் மற்றொரு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. இது கடந்த வாரம் 38,610 ஆக இருந்தது. மாநிலத்தில் கோவிட் தொடர்பிலான இறப்புக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த வாரம் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 78 ஆக இருந்தது. இதேபோல் விக்டோரியா இந்த வாரம் புதிய கோவிட் தொற்றுகள் மற்றும் கோவிட் இறப்பு ஆகிய இரண்டிலும் வீழ்ச்சியைக் கண்டது. Advertisement முந்தைய வாரத்தில் 24,238 தொற்றுகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தவாரம் 16,568 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த வாரம் 69 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 100 ஆக இருந்தது. நாட்டிற்குள் கோவிட் தொற்றுகள் அதி

d 329 புதிய சிக்கலில் சீனா - வடகொரியா..

புதிய சிக்கலில் சீனா - வடகொரியா..! ஜப்பான் அதிரடி முடிவு ஜப்பான் தொலைதூர எல்லைகளை தாக்கும் வகையில் ஏவுகணைகளை உருவாக்க இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஏவுகணைகளை 2030க்குள் உருவாக்கவும், இந்த ஏவுகணையானது 1,860 மைல்கள் தொலைவில் சென்று தாக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 3,000 கி.மீ தொலைவு வரையில் சென்று தாக்கும் இந்த ஏவுகணைகளால் வடகொரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளையும் இலக்கு வைக்க முடியும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. புதிய சிக்கலில் சீனா - வடகொரியா..! ஜப்பான் அதிரடி முடிவு | Japan Develop Missiles Reach China North Korea இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ராணுவத்திற்கு என 320 பில்லியன் டொலர் செலவிட முடிவு செய்துள்ளதாக ஜப்பான் இந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தது. சீனா உடனான மோதல் போக்கு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பயம் என ஜப்பானை இந்த முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர்

d 328 இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து!

இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து! தற்போது ஜீன்ஸ் அணிவது பொதுவான விடயம் மட்டுமல்ல, ஸ்டைலாகவும் இருக்கின்றது.புது புது நிறங்களிலும், அவற்றின் அலங்கரிப்பினாலும் நாம் கவரப்பட்டு அதனை வாங்கி உடுத்திக் கொள்கின்றோம். இவ்வாறு இறுக்கமாக அணிவதால் தொடர்ந்து நாம் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும். நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்புக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை சீர்குலைக்கும். மேலும் அவை அதிகப்படியான கீழ்-முதுகு வளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவை உங்கள் முதுகெலும்பு வட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கலாம். இனி இறுக்கமாக ஜீன்ஸ் அணியாதீர்கள்: அணிந்தால் ஆபத்து! | Effects Of Wearing Jeans Never Wear Tight Jeans பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றது. இவ்வாறு அணிவதனால் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இது தொடர்பான தெளிவான தகவல்களை கீழுள்ள காணொளி மூலம் அறிந்துக்கொள்ளுங்கள். வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்!

d 327 வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்!

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்! விந்தணுக்களை சேமிக்க அலைமோதும் ரஷ்ய வீரர்கள் ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதி படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதியை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் மருத்துவ காப்பீட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அலைமோதும் ரஷ்ய வீரர்கள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்! விந்தணுக்களை சேமிக்க அலைமோதும் ரஷ்ய வீரர்கள் | Ukraine War Russian Soldiers Save Their Sperm இந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா, உக்ரைன் மீதான தனது படையெடுப்பை தொடங்கியது. உக்ரைன் உடனான போரில் ரஷ்யா தற்போது அடுத்தடுத்த பின்னடைவுகளைத் சந்தித்து வரும் நிலையில் 3 லட்சம் படை வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த நிலையில

d 326 அடமானம் வைத்த நகைகள் மாண்டன

மீட்க பணமில்லை-அடமானம் வைத்த நகைகள் மாண்டன - இலங்கை மக்களின் அவலநிலை கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவன வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. பணம் இல்லாததால் அடகு வைத்த நகைகளை மக்கள் மீட்கமுடியாமல் அவை விற்பனை செய்யப்பட்டுவதாக கூறும் அந்த வட்டாரங்கள், நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றன. 19,300 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடமானம் மீட்க பணமில்லை-அடமானம் வைத்த நகைகள் மாண்டன - இலங்கை மக்களின் அவலநிலை | No Money To Redeem Mortgage Jewels Sold இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 40 இலட்சம் பேர் 19,300 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

d 325 ஏமாத்தத்துடன் நாடு திரும்பிய தமிழர்கள்,

வியட்நாமில் இருந்து நாடுதிரும்பியவர்களின் பரிதாபநிலை! கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக கப்பல் பயணம் சென்று வியட்நாமில் சிக்கிய 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த 151 பேர் கடந்த 28ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் சிலர் 4 மாதங்களின் பின் வீடு திரும்பினர். வியட்நாமில் இருந்து நாடுதிரும்பியவர்களின் பரிதாபநிலை! | The Plight Of The Returnees From Vietnam வீடு காணிகள் அடமானம் எனினும் பெரும்பாலானவர்கள் 6 மாதங்கள் வரையான காலத்தை தென்கிழக்காசிய நாடுகளில் கழித்துள்ளனர். சிலர் 8 மாதங்களிற்கும் அதிகமான காலத்தை அங்கு கழித்துள்ளனர். வீடு திரும்பியவர்கள் சிலர் வியட்நாமில் அகதி அந்தஸ்திற்காக காத்திருக்கும் காலத்தில் வட்டி, கடன் தொகை அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் நாடு திரும்பியதாக தெரிவித்தனர். ஏனெனில் , அவர்கள் அனைவரும் கடன் வாங்கியும், வீடு அல்லது காணிகளை அடமானம் வைத்து, இந்த பயணத்திற்காக பணம் திரட்டியுள்ளனர். இந்த பயணத்திற்காக ரூ.20 இலட்சம் வழங்கிய இளைஞர் ஒருவர், தா

d 324 யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்!

யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்! நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திர ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த விசித்திர ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு விவசாயி வீட்டிற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. விசித்திர ஆட்டுக்குட்டி யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்! | Jaffna Puththur Farmer Strange Eye Goat நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடே இவ்வாறு விசித்திர குட்டி ஒன்றை பிரசவித்துள்ளது. விவசாயியின் வீட்டில் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு நெற்றியில் இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன. பார்வையிடும் மக்கள் யாழில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி - பார்க்கப் படையெடுக்கும் மக்கள்! | Jaffna Puththur Farmer Strange Eye Goat டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட

d323 ரணிலின் காலத்தில் ஆட்கடத்தல் அதிகரிப்பு,

இலங்கை செல்ல விரும்புபவர்கள் ஐக்கி நாடுகளின் படையின் உதவியுடன் சென்று வரவும், கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! | A Father Of Three Is Missing In Colombo கடந்த 25 ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று புறக்கோட்டையில் தான் வேலை செய்யும் ஆடை விற்பனை நிலையத்துக்கு வேலைக்கு சென்றுள்ள முருகையா பத்திராஜா வீடு திரும்பவில்லை என, அவரது மனைவி இந்திராணி பத்திராஜாவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! | A Father Of Three Is Missing In Colombo சி.ஐ.பி. 328/236 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பில், ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த புறக்கோட்டை பொலிஸார் தகவல் எதுவும் வெளிப்படுத்தப்படாத நிலையி

d 322 மருத்துவ ரீதியான ஆலோசனை

எமது இணையெத்தை அனைத்து மொழிபேசக்கூடிய மக்களும் பார்க்கின்றார்கள் ஏனெனில் நாம் மக்களிற்குத் தேவையான மருத்துவக் குறிப்புக்களையும் தெரியப்படுத்துகின்றோம், இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை சாப்பிடவே கூடாது! முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல உடல நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை சாப்பிடவே கூடாது! | People Suffering Diseases Should Never Eat Radish இந்த நாட்களில் நீங்கள் முள்ளங்கியை சமைத்து அல்லது சாலட் வடிவில் சாப்பிடலாம். இருப்பினும், சில நோய்கள் இருப்பவர்கள் முள்ளங்கியை உட்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், குறிப்பிட்ட நோயாளிகளின் உடல்நிலை மோசமடையக்கூடும். எந்தெந்த நோய்களில் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை சாப்பிடவே கூடாது! | People Suffering Diseases Should Never Eat Radish தைராய்டு நோயாளிகள் : தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது இவ்வாறு செய்வதன் மூலம், உட

d 321 அதிகரிதுக்கொண்டே செல்லும் ரஸ்சியா மற்றும் மேற்கு நாடுகள் ரீதியான உறவுகள்

நட்பில்லா நாடுகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது! ரஸ்யாவின் அதிரடி அறிவிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் கிடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சேன்செலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற மாட்டார்கள் என ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. வாழ்த்துச் செய்தி இந்த வார இறுதியில் உலக புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில், துருக்கி, சிரியா, வெனிசுலா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்யாவின் நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். புத்தாண்டு வாழ்த்து கிடையாது நட்பில்லா நாடுகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது! ரஸ்யாவின் அதிரடி அறிவிப்பு | Newyear Greeting Us France Germany Putin Russia ஆனால் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீது முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளைக் குவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களுக்கு புடின் புத்தாண்டு வாழ்த்துக

d 320 சிங்களக் கைக்கூலிகளால் விவத்து என்றே பேரில் கொலை செய்யப்படும் தமிழர்கள்?

மன்னார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! மன்னார் - தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் இன்றைய தினம் (29-12-2022) இடம்பெற்றுள்ளது. மன்னார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Died In Mannar Accident மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய பேசாலை காவல் நிலைய வாகன சாரதியை மன்னார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பேசாலை காவல் நிலைய வாகன சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார். மன்னார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Died In Mannar Accident இந்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த காவல்துறை டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த இள

d 319 மிருகங்களை மிஞ்சிய இலங்கையெர்கள்,

இரண்டு வயது பெண் குழந்தை மீது பாலியல் பலாத்காரம் - சகோதரன் கைது மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் 2 வயதும் 8 மாதங்களுமேயான சித்தியின் பெண் குழந்தைக்கு பாலியல் சேஷ்டை புரிந்த மகன் முறையான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பித்துள்ளார். அத்துடன், அந்தக் குழந்தை மீது பாலியல் சேஷ்டையையும் புரிந்துள்ளார். காவல் நிலையத்தில் முறைப்பாடு இரண்டு வயது பெண் குழந்தை மீது பாலியல் பலாத்காரம் - சகோதரன் கைது | A Two Year Old Girl Was Raped இதனை உறவினரான பெண்ணொருவர் அவதானித்து, குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில், தனது மகனுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

d318 தனது தேர்தல் வாக்குக்குறுதியை காப்பாத்தும் அவுஸ் அரசு,

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து 100 பேர் வரை விடுவிப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட சுமார் 100 பேர், கிறிஸ்மஸ் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பதற்கான சாத்தியம் குறைவானவர்களை இத்தகைய தடுப்புமையங்களிலிருந்து விடுவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை விரைவுபடுத்துமாறு, லேபர்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு, ஒருவரது நன்நடத்தையின் அடிப்படையில்- அல்லது அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று உறுதிசெய்யப்பட்டதின் அடிப்படையில் - அல்லது குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் - அவரது விசாவை ரத்துச்செய்துவிட்டு காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என்ற வகையில் பலர் நாடெங்குமுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை வித

d 317 இலங்கை பூராத் தொடரும் இராணுவ வண்முறை,

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது மொனராகலை, எத்திமலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கொடியாகலயை வசிப்பிடமாகக் கொண்ட 11 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாவலர்களிடம் இருந்து கடத்திச் சென்று, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், செவ்வாய்க்கிழமை (27) இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இராணுவ சிப்பாய் துஷ்பிரயோகம் சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது | Kidnapping And Rape Of Girl Arrested Army Soldier அவர்களிடமும், சிறுமியிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அச்சிறுமி, இராணுவ சிப்பாயினால், ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்றில் முன்னிலை சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது | Kidnapping And Rape Of Girl Arrested Army Soldier கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் சியம்பலாண்

d 316 தவறான நடத்தையல் உயிரை விடும் தமிழ் இளைஞர்கள்,

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம் கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதி போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம் | Drug Use Person Death Jaffna Srilanka கடந்த செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு சென்ற இவர் உணவு உட்கொள்ளாது வேறு சில இளைஞர்களுடன் சென்றுள்ளார். பின்னர் இவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து விட்டு அங்குள்ள மரக்குற்றி ஒன்றில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் அவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில், அங்குள்ளவர்கள் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கு காரணம் போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! ய

d 315 முலைமுல்லை மைந்தனிற்கு பேர் அதிஸ்ற்றம்,?

லொத்தர் சீட்டிழுப்பில் முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம்! முல்லைத்தீவு மாவட்டதைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் அதிஷ்ட லாப சீட்டினை பெற்றவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. லொத்தர் சீட்டிழுப்பில் முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு அடித்த மிகபெரும் அதிர்ஷ்டம்! | Man From Mullaitivu Has Hit The Jackpot In Lottery இந்தப் பரிசுத்தொகை கடந்த 23.12.2022 திகதிக்கான மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் கிடைத்துள்ளது. சமீபத்தில் யாழ். சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

d 314 உணவு சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விடையம்?

மென்று சாப்பிடாவிட்டால் இவ்வளவு பிரச்சினையா? திடுக்கிடும் சில உண்மைகள் பொதுவாக சிலருக்கு அடிக்கடி செரிமான பிரச்சினைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சினைகளுக்கு உணவை நாம் மென்று சாப்பிடாதது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நமது வீட்டிலிருக்கும் முதியவர்கள் உணவை சாப்பிடும் போது மென்று சாப்பிடும்படி அடிக்கடி கூறுவார்கள். ஏனெனின் அந்த உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அணைத்தும் தமது உடலில் சேர வேண்டும் என்பதற்காக தான் அதன் நோக்கமாகும். உணவை முறையாக சாப்பிடாவிட்டால் செரிமாண பிரச்சினை,மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு என பல பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் உணவினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கலோரிகள் என்பன உடலில் குறைவடையும். அந்த வகையில் மென்று சாப்பிடாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.

d313 இலங்கையில்இடம்பெறும் மிகப் பெரும் பண மோசடி!

புலம்பெயர் தமிழர்களின் கடவுச் சீட்டுகள் தொடர்பில் இடம்பெறும் மிகப் பெரும் பண மோசடி! புலம்பெயர் தமிழர்களின் கடவுச் சீட்டுகள் திட்டமிட்டு தாமதிக்கப்பட்டு மிகப் பெரும் பண மோசடி செய்யப்படு வருதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 1939ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் திருநாட்டின் கெளரவமானது இப்பூகோளத்தில் மிகவும் கனதியானதொன்றாகவிருந்தது..! நாம் தானியங்களையும், உணவு உற்பத்திகளையும் உதவியாக எமது அண்டைய நாடுகளுக்கு கொடுத்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்..! ஆனால், இன்றோ எந்த நாடு எமக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இத் திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..! புலம்பெயர் தமிழர்களின் கடவுச் சீட்டுகள் தொடர்பில் இடம்பெறும் மிகப் பெரும் பண மோசடி! | Money Fraud Involving Passports Diaspora Tamils இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று நாம் ஒவ்வொருவரும் எம்மை நாம் கேட்டுக்கொள்வதே பொருத்தமாகவிருக்கும்..! நாடு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது..! இவற்றுக்கு காரணமானவர்களாக எமது கொள்கை வகுப்பாளர்களும், அரச இயந்திரத்தை இயக்கும் உயர்மட்ட

d 312 உலகத்திலே பாலியெலிற்கு பேர் போன சிங்கள சிப்பாய்கள் தற்பொழுது தங்களின் பிள்களைக் கூட விட்டு வைப்பார்களா?

தந்தையின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் -12 வயது சிறுமி எடுத்த துணிச்சலான முடிவு இரண்டு வருடங்களுக்கு மேலாக தந்தையின் துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத 12 வயது பதின்ம வயது சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னாவ காவல்நிலையத்தில் நேற்று (26) முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபரான தந்தை, பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றநிலையில் கைது செய்யப்பட்டதாக கல்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னாவ பிரதேசத்திற்கு குடிபெயர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் தந்தையின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் -12 வயது சிறுமி எடுத்த துணிச்சலான முடிவு | Father Molested Daughter Was Arrested சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமியை 10 வயது முதல் (2019) தற்போது வரை தந்தை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னர், சிறுமியின் தாய் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக கம்பளைக்கு

d 311 சாறி மோகத்தில் உயரை விடும் தமிழ் பெண்கள்,

புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து - பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம் யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் உந்துருளியில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் உந்துருளியில் பயணித்த மகள் காயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விசாரணை புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து - பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம் | Saree Got Caught Engine Chip Accident In Yarl இந்த விபத்து சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

d 310 தமிழர் பகுதியில் மனித உயிர்கள் மதிக்கப்படுகின்றெதா?

கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் யுவதி ஒருவர் தனது பல்லில் ஏற்பட்ட வலி காரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பல்வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றிற்கு கடந்த 13ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்ற்குப் பதிலாக அதனை நவீன சிகிச்சை மூலம் நிரப்பிக்குணப்படுத்தலாம் என்றும் அதற்கு ரூபா 18 ஆயிரம் செலவாகும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache அதற்கு உடன்பட்டு குறித்த யுவதி சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். திடீரென வைத்தியர் சிகிச்சையை நிறுத்தி “ ஒரு சின்னக் கிளிப் ஒன்று உள்ளுக்க போயிற்று. பயப்பட வேண்டாம் வீட்டுக்கு போய் வாழப்பழம் பப்பாப்பழம் நிறையச் சாப்பிடுங்க அது நாளைக்கு மோசனோட வெளிய போயிரும் சனிக்கிழமை வாங்க” என்று சொல்லி அனுப்புகிறார். இதேவேளை, வாய் முழுவதும் விறைத்த நிலையிலிருந்தமையால் என்ன நடந்ததென்று உணரமுடியாத யுவதி அவர் சொன்னது போல செய்த பின்னரும் மறுநாள் அவ்வாறு

d 309 தமிழர் பகுதியில் தொடரும் சிங்களக்காடை யெர்களின் அட்டகாசம்?

யாழில் வீதியில் செல்லும் மக்களுக்கு கடற்படையினரால் நேர்ந்த நிலை யாழ்ப்பாணம் மாவட்டம் - பொன்னாலை சந்தியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் இருக்கும் கடற்படையினர், சோதனை என்ற பெயரில் வீதியில் செல்பவர்களை இன்னால்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். யாழில் வீதியில் செல்லும் மக்களுக்கு கடற்படையினரால் நேர்ந்த நிலை | Marines Harassing People On The Streets In Jaffna இந்த செயல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர் வீதியில் செல்பவர்களை காணொளி எடுத்து அச்சுறுத்தும் விதத்திலும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழில் வீதியில் செல்லும் மக்களுக்கு கடற்படையினரால் நேர்ந்த நிலை | Marines Harassing People On The Streets In Jaffna குறித்த வீதியில் இன்றைய தினம் (26-12-2022) இறாலுடன் சென்ற வியாபாரி ஒருவரை வழிமறித்து அவர் கொண்டு சென்ற இறாலை வீதியில் கொட்டுமாறு கூறி அவரது தொழிலுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

d 308 நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..

நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! பொதுவாகவே நம்மில் ஒரு சிலர் தமது பொருட்களை சிலருக்கு கொடுக்கமாட்டார்கள், ஆனால் ஒரு சிலர் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வது அவர்களின் இயல்பு. ஆனால் ஒரு சில பொருட்களை யாருக்குமே கொடுக்க கூடாது அப்படியானயானதொரு பொருள் தான் டவல். நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தால் உங்களால் அவருக்கும் அவரால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். அப்படியென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை விபரமாக பார்க்கலாம். வைரஸ் கிருமி நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! | Do Not Give Your Used Towel To Anyone வைரஸ் கிருமியால் பெண்களின் பிறப்புறுப்பில் மரு மாதிரியொன்று வரும், இதற்கு ஹெச்.பி.வி. எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்தான் காரணமாகும். இந்த வைரஸால் பாதிக்கப்படுவது ஒன்று பாலியல் உறவுகளினால் மற்றொன்று உடல் தொடர்புகளின் மூலமாகும். இந்த வைரஸில் 99 சதவீதம் பாலியல் உறவுகளினால் மாத்திரம் அதிகம் நிகழ்கிறது. நீங்கள் பயன்படுத்தும் டவலை யாருக்கும் கொடுக்காதீர்கள்..! | Do Not Give Your Used Towel To Anyone

D 307 இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்!

பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்! இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பை சந்தித்து பேசுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். தமிழர் தரப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வருகின்ற ஜனவரி மாதம் 12,13,14 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், குறித்த பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வை பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்! | Tamil Parties Expecting India Sl Gvnt Negotiation தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இதுவரை காலமும் இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்கொண்ட அத்

d 306 உலகில் நடக்கும் அதிசயங்களில் ஒன்று,,

இளைஞரின் உடலுக்குள் பெண் இனப்பெருக்க உறுப்புகள்! அதிர்ச்சியை கிளப்பிய செய்தி இந்தியாவில் இளைஞர் உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டுள்ள விடயம் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. வயிற்று வலி ஜார்க்கண்ட்டின் குட்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்ற நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. இளைஞரின் உடலுக்குள் பெண் இனப்பெருக்க உறுப்புகள்! அதிர்ச்சியை கிளப்பிய செய்தி | Teen Age Man Stomach Pain Shocked Find பெண் இனப்பெருக்க உறுப்புகள் இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டு உள்ளன. கருப்பை, அதற்கான குழல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளன. இதையறிந்து இளைஞர் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி டாக்டர் தாரா சங்கர் ஜா கூறும்போது, கோடிக்கணக்கானோரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படும். அறுவை சிகிச்சையில் அவரின் அனைத்து ப

d 305 இலங்கைக்குள் நுழைந்த தாழமுக்கம்:

இலங்கைக்குள் நுழைந்த தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை.. ! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துள்ளது. இந்நிலையில், தாழமுக்கம் இன்று (26) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொந்தளிக்கும் கடல் இலங்கைக்குள் நுழைந்த தாழமுக்கம்: இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! | Weather Today Sri Lanka எனவே, நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (06N – 14N, 78E – 85E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய, மீன்வர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசன

d 304 தமிழர் பகுதியில் பாரிய அனர்த்தம். மீழ முடியாத பண்ணைக்காரன்

மின்னல் தாக்கியதில் 27 கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்! மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மின்னல் தாக்கியதில் 27 கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்! | 27 Cattle Were Struck By Lightning அத்துடன், மின்னல் தாக்கியதில் குறித்த கால்நடைப் பண்ணை முற்றாக சேதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது

d 303 உணவு நடைமுறையூடாக எதையும் சாதிக்கலாம்,

மாதவிடாய் வலியை போக்க Tablets சாப்பிடலாமா? பொதுவாக பெண்கள் அனைவருமே மாதம் ஒரு முறை சந்திக்கும் ஒரு முக்கியபிரச்சினை தான் மாதவிடாய் வலி. வயிற்று வலி, கை, கால் வலி மற்றும் தசைப்பிடிப்பையும் சிலருக்கு அதிகமாக உண்டாக்கும். இதற்காக நம்மில் பல பெண்கள் வலியை தாங்க முடியாமல் Tablets எடுத்து கொள்வார்கள். இது உண்மையில் தவறான செயலாகும். Tablets எடுத்து கொள்ளலாமா? Tablets எடுத்து கொள்வது பின்னடைவில் பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். எனவே இவற்றை முடிந்தவரை தடுத்து கொள்ளுங்கள். மாதவிடாயை வலியை குறைக்க செய்ய வேண்டியவை உணவுப்பழக்கத்தை மாற்றி கொள்ளுதல் நார்ச்சத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் நல்லெண்ணையும் முட்டையும் 6-7 மணிக்குள் குடிக்கவும். ஜுஸ் குடிப்பது, காய்கறி ஜுஸ், ABC ஜுஸ் குடிக்கலாம். சீனி பால் சேர்க்கமால் எடுத்து கொள்வது நல்லது. 10 மணிக்கு தூக்குவது செல்வது மிகவும் நல்லது. மாதுளை, கிர்ணிப்பழம், முலாம்பழம் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இது குறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

d 302 இதைச்செய்ய உலகத்தில் இவர்களால் மட்டும்தான் முடியும்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய் மொராக்கோவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் அந்த பெண் பிரசவம் ஆகி உள்ளார். ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளது. சிசேயின் கர்ப்பமாக இருந்த 30 வாரங்களில் மே 4, 2021 அன்று சிசேரியன் மூலம் பிரசவம் ஆகி உள்ளது. 5 பெண் - 4 ஆண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த தாய் | Guinness Record For Mother Gave Birth 9 Children குழந்தைகளின் பெயர் அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்ற 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் 0.5 - 1 கிலோ (1.1 - 2.2 எல்பி) வரை எடையுள்ளதாக இருந்தது. அதேவேளை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. மாலியில் உள்ள மருத்துவர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பி இருந்தனர். இதற்கு முன்பு 2