முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 310 தமிழர் பகுதியில் மனித உயிர்கள் மதிக்கப்படுகின்றெதா?

கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
யுவதி ஒருவர் தனது பல்லில் ஏற்பட்ட வலி காரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பல்வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றிற்கு கடந்த 13ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்ற்குப் பதிலாக அதனை நவீன சிகிச்சை மூலம் நிரப்பிக்குணப்படுத்தலாம் என்றும் அதற்கு ரூபா 18 ஆயிரம் செலவாகும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache அதற்கு உடன்பட்டு குறித்த யுவதி சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். திடீரென வைத்தியர் சிகிச்சையை நிறுத்தி “ ஒரு சின்னக் கிளிப் ஒன்று உள்ளுக்க போயிற்று. பயப்பட வேண்டாம் வீட்டுக்கு போய் வாழப்பழம் பப்பாப்பழம் நிறையச் சாப்பிடுங்க அது நாளைக்கு மோசனோட வெளிய போயிரும் சனிக்கிழமை வாங்க” என்று சொல்லி அனுப்புகிறார்.
இதேவேளை, வாய் முழுவதும் விறைத்த நிலையிலிருந்தமையால் என்ன நடந்ததென்று உணரமுடியாத யுவதி அவர் சொன்னது போல செய்த பின்னரும் மறுநாள் அவ்வாறு எதுவும் வெளிவந்ததாக உணராத நிலையில் அச்சமடைந்த யுவதி பல் வைத்தியரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கிறார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache அவரோ அது ஒரு பெரிய விடையமே இல்லை என்றும் அது பற்றி யோசிக்கத்தேவையில்லை என்றும் ஆலோசனை கூறுகிறார். இப்போது யுவதிக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. வைத்தியரிடம் எக்ஸ்ரே எடுத்துப்பாரக்க விரும்புவதாகவும் அதற்கு கடிதம் தருமாறும் கேட்கிறார். வைத்தியர் பல சாக்குப்போக்குச் சொல்லி தவிர்க்க முயல்கிறார். யுவதி பய மிகுதியால் அவரைப் பலமுறை வற்புறுத்தவும் வைத்தியர் அவரை ஒரு கிழமையின் பின்னர் சாவகச்சேரி வைத்திய சாலைக்குச்சென்று எக்ஸ் ரே எடுக்கும்படி கடிதம் கொடுத்து அனுப்புகிறார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache அவரது சிகிச்சை நிலைய முகவரியிடாமல் பளை முகவரியிட்டு அந்த கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. யுவதி தனக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்து அங்கு செல்வதைத் தவிரத்து 21ம் திகதி யாழ்ப்பாணம் வந்து பிரபல தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க முயன்றிருக்கிறார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache
இதற்கிடையில் நெஞ்சில் இனம்புரியாத வலி, மூச்செடுக்கும்போது இருமல் போன்ற உபாதை ஏறபட்டு அவதியுறுகிறார். எக்ஸ்ரே எடுத்து அவரைப் பரிசோதித்த வைத்தியர் “ உங்கள் பிரச்சனை சிக்கலானது உடனடியாக நீங்கள் பெரிய மருத்துவமனைக்கு போய் காட்டுங்கள். தாமதிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache அன்று இரவே யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதியின் தந்தையிடம் சத்திர சிகிச்சை நிபுணர் திடுக்கிடும் தகவலைத் தெரவித்தார். உங்கள் பிள்ளையின் சுவாசக்குழாயினுள் ஒரு பல்சத்திர சிகிச்சை உபகரணம் சிக்கியுள்ளது. இது ஒரு பார தூரமான நிலமை. அதை எடுப்பது கொஞ்சம் சிக்கலாக இருக்கும். எடுக்காமலும் விடமுடியாது. ஆபத்தான இடத்தில் இருக்கிறது. நாங்கள் முயற்சி செய்கிறோம். என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பல் வலியால் வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் | Girl Went To Hospital In Kilinochchi Due Toothache இதனை கேட்டு உடைந்துபோன தந்தை செய்வதறியாது தவிக்கிறார். அதிகாலை சத்திர சிகிச்சைக்கூடத்தில் வைத்திய நிபுணர்களின் பெருமுயற்சியால் அந்தப் பொருள் அவளின் மூச்சுக்குழாயிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். துளையிடும் கருவியின் 2 அங்குல நீளமான கூர்முனை கழன்று மூச்சுக்குழாயினுள் போன நிலையில் பொறுப்புணர்வோடு அந்த நபரை தானே வைத்தியசாலையில் அனுமதிக்க வைத்து உடனடிச் சிகிச்சை மூலம் அதைவெளியகற்ற நடவடிக்கை எடுக்காமல் மிக அலட்சியமாகவும் வைத்தியத்துறைக்கே அபகீர்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதமாகச் செயற்பட்ட இத்தகைய வைத்தியர்களை இனங்காண வேண்டும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?