முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

D 307 இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்!

பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்!
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பை சந்தித்து பேசுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். தமிழர் தரப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வருகின்ற ஜனவரி மாதம் 12,13,14 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், குறித்த பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வை பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்! | Tamil Parties Expecting India Sl Gvnt Negotiation தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இதுவரை காலமும் இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பிரச்சனைகளையும் இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. இந்தநிலையில், தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் வகிபாகம் இருந்தால் மாத்திரமே தமிழ் மக்கள் சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வலியுறுத்தும் தமிழர் தரப்புக்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்தை எதிர்பார்க்கும் தமிழர் தரப்புக்கள்! | Tamil Parties Expecting India Sl Gvnt Negotiation இதேவேளை, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் வகிபாகம் அவசியம் என கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்புகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?