முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 288 இலங்கையில் தொரும் மனித படுகொலைகள்,

பாதுபாப்பான நிலை வரும்வரை இலங்கை செல்வதை தவிர்க்கவும் உங்களிற்கும் இந்த நிலை வரலாம்,
கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை - அதிர்கிறது தென்னிலங்கை இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் நம்பபான, கடகரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைகள் மற்றும் வாயைக் கட்டியவாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த அசோக பண்டார என்று அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பழ வியாபாரம் செய்பவர் கொடுத்த தகவல் கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை - அதிர்கிறது தென்னிலங்கை | Another Individual Was Killed With Both Hands Tied மினுவாங்கொடை கல்லொலுவ குறுக்கு வீதியில் வசிக்கும் இவர் வாடகை வண்டி சாரதியாக பணிபுரியும் ஒரு பிள்ளையின் தந்தையாவார். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சடலம் தொடர்பில் இங்கிரிய காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார். சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, உயிரிழந்தவரின் கைகள் பெல்ட் மற்றும் வெள்ளைத் துணியால் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும், வாய் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மனைவி வெளிநாட்டில் கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை - அதிர்கிறது தென்னிலங்கை | Another Individual Was Killed With Both Hands Tied சடலம் கண்டுபிடிக்கப்படும் போது உள்ளாடை மாத்திரமே அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் தனது சொகுசு காரை பிரபல இரண்டு டாக்சி நிறுவனங்களில் பதிவு செய்து, வாடகை பயணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும், அவ்வப்போது வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவாரத்திற்குள் பிரபல தமிழ் வர்த்தகர் , மற்றுமொரு வர்த்தகர் உட்பட மூவர் தென்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?