முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 243 இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா.தலையீடு முக்கியம்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..!
தீர்வு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என எதிர்பார்க்கிறோம், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem "வடக்கு மாகாணத்தில் இன்றும் போர் சூழல் நிலைமை தான் தற்போதும் காணப்படுகிறது. துப்பாக்கி சத்தங்கள் மாத்திரம் தான் இல்லை,ஆனால் போர் சூழலுக்கான சகல துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். காணி அபகரிப்பு தொடர்ந்து இடம்பெறும் நிலையில் தான் உள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் காணிகளை அபகரிக்கிறது. வடக்கு மாகாண மக்கள் விவசாயம் மற்றும் கடற்றொழில் கைத்தொழில் துறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மறுபுறம் இராணுவத்தினர் தமக்கான காணிகளை சுவீகரித்த நிலையில் உள்ளார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிவற்றை முன்னிலைப்படுத்தியதாக அமைய கூடாது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு மனசாட்சியின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாகும். தீர்வு காணும் பொறிமுறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தீர்வு காணும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் மேற்பார்வையில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதித்துவம், நிபுணர் குழுவினர், புலம் பெயர் உறவுகள் ஆகிய தரப்பினரை ஒன்றிணைக்கும் ஒரு பொறிமுறை வகுக்கப்படும் போது தான் ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து தலையிட்டுள்ளது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக வலுவாக செயற்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா மேற்பார்வை பொறுப்பை எடுக்குமாக இருந்தால் ஒரு நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை விவகாரத்தில் பார்வை கொண்டுள்ள நாடுகளையும் இவ்விவகாரத்தில் இணைத்துக் கொண்டால் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். 13 ஆம் திகதி பேச்சுவார்த்தை இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சுபீட்சமான ஒரு நாட்டை உருவாக்க முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். எதிர்வரும் 13 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் நோக்கம் மனசாட்சியுடன் இடம்பெற வேண்டும்" என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?