முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 296 தமிழர் பகுதி கோர விபத்தில் லியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள்

தமிழர் பகுதி கோர விபத்தில் பலியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள்
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர். தமிழர் பகுதி கோர விபத்தில் பலியான இளம் தாயார்; தவிக்கும் பிள்ளைகள் | Young Mother Who Died In An Accident Kilinochchi தாய் எப்படிக் கிடைப்பாள்? குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் - பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார். இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத கண்ணீருக்கும் யார் பதிலளிப்பது? இதே விபத்தில் பத்து வயது மாணவி ஒருவரின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமைய போகிறது . எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படியான அதிவேக போக்குவரத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகின்றதோ.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?