முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d318 தனது தேர்தல் வாக்குக்குறுதியை காப்பாத்தும் அவுஸ் அரசு,

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களிலிருந்து 100 பேர் வரை விடுவிப்பு
ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட சுமார் 100 பேர், கிறிஸ்மஸ் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பதற்கான சாத்தியம் குறைவானவர்களை இத்தகைய தடுப்புமையங்களிலிருந்து விடுவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை விரைவுபடுத்துமாறு, லேபர்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு, ஒருவரது நன்நடத்தையின் அடிப்படையில்- அல்லது அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று உறுதிசெய்யப்பட்டதின் அடிப்படையில் - அல்லது குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் - அவரது விசாவை ரத்துச்செய்துவிட்டு காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என்ற வகையில் பலர் நாடெங்குமுள்ள குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றச்செயல் ஒன்றைப் புரிந்திருந்தால் அவரது விசாவை நிராகரித்து நாடுகடத்தமுடியும். Advertisement குறித்த நபர் நாடுகடத்தப்படும்வரை தடுப்புக்காவலில் இருக்க வேண்டும். அல்லது அவர் நாடு கடத்தப்படுவதற்கான சூழ்நிலை இல்லாதபட்சத்தில் அந்நபர் காலவரையறையற்ற தடுப்புக்காவலில் இருக்க நேரிடுகிறது. இந்தப்பின்னணியில் தடுப்புக்கால எல்லை, அவரது வழக்கின் தன்மை, நடத்தை மற்றும் நாட்டின் பாதுகாப்பு உட்பட பல அம்சங்களில் தங்கியுள்ளதாகவும், தடுப்புக்காவல் காலத்தை குறைப்பதற்கான பல்வேறு வழிகள் தொடர்பில் தமது அரசு ஆராய்ந்துவருவதாகவும் லேபர் கட்சி தெரிவித்திருந்ததன் அடிப்படையில் தற்போதைய கிறிஸ்மஸ் விடுமுறைக்காலத்தில் 100 பேர் வரை தடுப்புமுகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 23ம் திகதியிலிருந்து, சிட்னியில் உள்ள Villawood மற்றும் Broadmeadowsஇல் உள்ள மெல்பன் குடிவரவு தடுப்பு முகாம் உள்ளிட்டவற்றிலிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படும் குடிவரவு தடுப்பு முகாம்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் தடுத்துவைக்கப்படும் சராசரி காலப்பகுதி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காணப்படுவதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?