வடக்கிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ள பழங்கள்: நடவடிக்கை எடுக்கும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்! விளம்பரம் வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார். அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய வசதிகள் இல்லாமை உட்பட அதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவுள்ள ஜப்பான் துரித செயன்முறை குறிப்பாக, இது குறித்து போக்குவரத்து அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கென விசேட நிதியும் கிடைக்கப்பெறவுள்ளதுடன் அதனூடாக வடக்கிலுள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும் களஞ்சிய வசதிகளை நவீனமயப்படுத்தவுள்ளத
ஊறவைத்த வெந்தய நீர் குடிப்பது எதுக்கெல்லாம் நல்லது தெரியுமா? விளம்பரம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. உங்களது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன. உடல்சூட்டை தணிக்கக்கூடியது வெந்தயம். சிறுநீரையும் பெருக்கக்கூடியது. இதை தவிர வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. இவ்வளவு நன்மை தரும் வெந்தய நீரை குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும். வெந்தய நீர் ஒரு நாள் முழுக்க வெந்தய நீரை குடித்து வந்தால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது டல் உட்பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவ